Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தான் வீரர்களுக்கு பிரியாணி, பீட்ஸா & பர்கர் கட் – மிஸ்பா உல் ஹக் அதிரடி !

Webdunia
செவ்வாய், 17 செப்டம்பர் 2019 (13:13 IST)
பாகிஸ்தான் வீரர்கள் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளும் பொருட்டு அவர்களுக்கு சில உணவுகளை நீக்க உத்தரவிட்டுள்ளார் தலைமைப் பயிற்சியாளர்.

பாகிஸ்தான் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராகவும் தேர்வுக்குழு தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார் பாக் முன்னாள் கேப்டன் மிஸ்பா உல் ஹக். இந்நிலையில் அவர் அணிக்கு சில் அதிரடி உத்தரவுகளை விதித்துள்ளார். அவற்றுள் மிக முக்கிய வீரர்கள் அனைவரும் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்க பிரியாணி,எண்ணெயில் பொறிக்கப்பட்ட உணவுகள், பர்கர், பீட்ஸா மற்றும் ஸ்வீட் ஆகிய பொருட்களை சாப்பிடக்கூடாது என உத்தரவிட்டுள்ளார்.

சமீபத்தில் நடந்த இந்தியா பாகிஸ்தான் உலகக் கோப்பைப் போட்டிக்கு முந்தைய நாள் பாகிஸ்தான் வீரர்கள் பீட்ஸா போன்ற உணவுகளை சாப்பிட்டதும் போட்டியின் போது பாக் கேப்டன் சர்பராஸ் கான் கொட்டாவி விட்டதும் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது. அதனால் இத்தகைய முடிவுகள் எடுக்கப்பட்டு இருக்கலாம்.

தொடர்புடைய செய்திகள்

மழையால் தாமதமாகும் ராஜஸ்தான் - கொல்கத்தா போட்டி.. போட்டி ரத்தானால் 2ஆம் இடம் யாருக்கு?

ஐதராபாத் அபார வெற்றி.. 214 ரன்கள் அடித்தும் பஞ்சாப் பரிதாபம்.. புள்ளிப்பட்டியலில் 2ஆம் இடம்..

எங்க போனாலும் கேமராவை தூக்கிக்கிட்டு உள்ள வந்துடுவீங்களா? – ஸ்டார் ஸ்போர்ட்ஸை பொறிந்து தள்ளிய ஹிட்மேன்!

சாதனை படைத்த RCB vs CSK போட்டி..! இத்தனை கோடி பேர் பார்த்தார்களா..?

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து ஜெயக்குமார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments