Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் திடீர் நீக்கம்:

Webdunia
வெள்ளி, 18 அக்டோபர் 2019 (14:10 IST)
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து சர்ஃப்ராஸ் அகமது திடீரென நீக்கப்பட்டுள்ளதால் அந்நாட்டு கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
பாகிஸ்தான் அணியின் டெஸ்ட் மற்றும் டி-20 அணியின் கேப்டனாக இருந்த சர்ஃப்ராஸ் நீக்கத்தை அடுத்து அவருக்கு பதில் 'அஸார் அலி' டெஸ்ட் அனியின் கேப்டனாகவும், டி20 அணியின் கேப்டனாக பாபர் அசாமும் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதனையடுத்து விரைவில் நடைபெறவிருக்கும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக பாபர் அசாம் செயல்படுவார் என தெரிகிறது
 
சமீபத்தில் நடந்து முடிந்த உலக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் தோல்விக்குள்ளானது சர்ச்சையான நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிகிறது. அதுமட்டுமின்றி சமீபத்தில் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரிலும் பாகிஸ்தான் அணி சொந்த மண்ணிலேயே தொடரை இழந்ததும் இந்த நீக்கத்திற்கு காரணமாக கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கில் இன்னிங்ஸுக்கு நடுவே சோம்பேறியாகிவிடுகிறார்… ரிக்கி பாண்டிங் விமர்சனம்!

விராட் கோலி மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்குத் திரும்புவார்- மைக்கேல் கிளார்க் நம்பிக்கை!

ODI –ல் சதமடித்தாலும் பாராட்டமாட்டார்.. ஆனால் டெஸ்ட்டில் 50 ரன்கள் அடித்தாலே…- அப்பா குறித்து ரோஹித் நெகிழ்ச்சி!

விராட் கோலியை கைது செய்ய வேண்டும்..? அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வேலையா? - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

அனைத்து விதமானக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு.. பியுஷ் சாவ்லா அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments