Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனி விமான திட்டம் இப்போதைக்கு இல்லை… ஆஸி கிரிக்கெட் வாரியம் பல்டி!

Webdunia
செவ்வாய், 4 மே 2021 (08:21 IST)
ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் ஆஸி வீரர்களை தனி விமானத்தில் நாட்டுக்கு அழைத்துச் செல்ல அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளதாக சொல்லப்பட்டது.

ஐபிஎல் தொடரில் ஆஸி வீரர்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பரவல் வேகம் அவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நாடு திரும்ப பலரும் ஆசைப்படுவதாக தெரிகிறது. இந்நிலையில் ஆஸி கிரிக்கெட் வாரியம் இந்தியாவில் இருக்கும் அவர்களை நாட்டுக்கு அழைத்துச் செல்ல தனி விமானம் ஏற்பாடு செய்வதாக சொல்லபப்டுகிறது. ஒருவேளை ஆஸி வீரர்கள் கிளம்பினால் மற்ற நாட்டு வீரர்களும் அதே போல கிளம்ப வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

ஆனால் இது சம்மந்தமாக இப்போது பேசியுள்ள ஆஸி கிரிக்கெட் வாரிய தலைவர் நிக் ஹாக்லி. , ‘இப்போதைக்கு ஆஸி வீரர்களை தனி விமானத்தில் அழைத்து வரும் திட்டம் எதுவும் இல்லை’ என்று கூறியுள்ளார். நேற்று ஐபிஎல் ல் விளையாடும் இரு அணிகளைச் சேர்ந்த ஐவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments