4வது டி20 போட்டி: டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச முடிவு

Webdunia
வெள்ளி, 31 ஜனவரி 2020 (12:32 IST)
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து டி20 போட்டி தொடரில் முதல் மூன்று டி20 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை வென்று விட்டது
 
இந்த நிலையில் இன்று இரு அணிகளுக்கும் இடையிலான நான்காவது டி20 போட்டியில் வெல்லிங்டன் நகரில் இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது. இந்த நிலையில் சற்று முன் போடப்பட்ட டாஸில் நியூஸிலாந்து கேப்டன் செளதி டாஸ் வெற்றி பெற்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். 
 
மேலும் இன்றைய அணியில் நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் காயம் காரணமாக விலகி உள்ளதால் அவருக்கு பதிலாக கேப்டன் பொறுப்பை செளதி ஏற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இன்றைய போட்டியில் ரோஹித் சர்மா, ஷமி, ஜடேஜா ஆகியோர்கள் இல்லை. அவர்களுக்கு பதிலாக சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், சயினி ஆகியோர் உள்ளனர். இன்றைய போட்டியில் விளையாடும் இரு அணி வீரர்களும் விபரங்கள் பின்வருமாறு
 
இந்தியா: சஞ்சு சாம்சன், கே.எல்.ராகுல், விராத் கோஹ்லி, ஸ்ரேயாஸ் அய்யர், மனிஷ் பாண்டே, ஷிவம் டூபே, வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், சாஹல், நவ்தீப் சயினி, பும்ரா
 
நியூசிலாந்து: குப்தில், முன்ரோ, டாம் புரூஸ், டெய்லர், மிட்செல், டிம் செய்பிரிட், சாண்ட்னர், ஸ்காட், செளதி, இஷ் ஷோதி, பென்னட்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

201 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன இந்தியா… ஃபாலோ ஆன் கொடுக்காத தென்னாப்பிரிக்கா!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சாதனை: அரைசதத்தில் ஜெய்ஸ்வால் புதிய மைல்கல்!

தென்னாப்பிரிக்கா அபார பந்துவீச்சு.. 7 விக்கெட்டுக்களை இழந்த இந்தியா.. ஃபாலோ ஆன் ஆகிவிடுமா?

40 வயதில் பைசைக்கிள் கோல்… ரசிகர்களை வாய்பிளக்க வைத்த GOAT ரொனால்டோ!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: கேப்டனாக கே.எல். ராகுல்; மீண்டும் அணியில் ருதுராஜ் !

அடுத்த கட்டுரையில்
Show comments