Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நியூசிலாந்து அபார வெற்றி.. அரையிறுதிக்கு தகுதி பெற்றதா?

Webdunia
வியாழன், 9 நவம்பர் 2023 (19:54 IST)
இன்று நடைபெற்ற இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தில் வலிமையாக உள்ளது. இருப்பினும் அந்த அணி அரை இறுதிக்கு தகுதி பெற்றதா என்பது அடுத்த இரண்டு போட்டிகளின் முடிவில் தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இன்றைய போட்டியில் இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்து 171 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. 172 என்ற இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணி 23 ஓவர்களிலேயே இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது. இதனை அடுத்து நியூசிலாந்து அணி தற்போது புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது. மேலும்  0.743 என்ற ரன் ரேட் விகிதத்தில் உள்ளது.
 
இந்த ரன் ரேட்டை  தொடுவது என்பது ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு சாதாரணமானது அல்ல. ஆப்கானிஸ்தான் அணி  --0.338 என்ற ரன் ரேட்டிலும், பாகிஸ்தான் அணி 0.036 என்ற ரன் ரேட்டிலும் உள்ளதால் நியூசிலாந்து அணி கிட்டத்தட்ட அரையிறுதிக்கு தகுதி பெற்றதாகவே கருதப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் 2025: டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங் தேர்வு.. கொல்கத்தாவிற்கு இன்னொரு வெற்றி கிடைக்குமா?

ஐபிஎல் போட்டிகளில் பேட்ஸ்மேன்களின் பேட் அளவை அளக்கும் நடுவர்கள்… காரணமென்ன?

விக்கெட் கீப்பிங்கில் இரட்டை சதம் அடித்த தோனி… புதிய சாதனை!

எனக்கு எதுக்கு ஆட்டநாயகன் விருது… அதுக்கு தகுதியானவர் அவர்தான் – தோனி ஓபன் டாக்!

தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி.. பொறுமையை சோதித்த ஷிவம் துபே.. தோனி அதிரடியால் சிஎஸ்கே வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments