Webdunia - Bharat's app for daily news and videos

Install App

14 ரன்களுக்கு 4 விக்கெட்டுக்கள்: நியூசிலாந்தை திணறடிக்கும் இந்திய பவுலர்கள்..!

Webdunia
புதன், 1 பிப்ரவரி 2023 (21:17 IST)
14 ரன்களுக்கு 4 விக்கெட்டுக்கள்: நியூசிலாந்தை திணறடிக்கும் இந்திய பவுலர்கள்..!
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் இறுதி டி20 கிரிக்கெட் போட்டி தற்போது அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
 
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி சுப்மன் கில் அடித்த அபார சதம் காரணமாக 20 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 234 ரன்கள் எடுத்தது. இந்த நிலையில் 235 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடி வரும் நியூசிலாந்து அணி மூன்று ஓவர்களில் நான்கு விக்கெட் இழந்து வெறும் 14 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. 
 
இதனை அடுத்து இந்திய அணியின் வெற்றி கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நியூசிலாந்து அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களான அலென், கான்வே, மார்க் மற்றும் பிலிப்ஸ் ஆகிய 4 பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க எண்களில் தங்கள் விக்கெட்டுகளை பறி கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

சாதனை படைத்த RCB vs CSK போட்டி..! இத்தனை கோடி பேர் பார்த்தார்களா..?

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து ஜெயக்குமார்..!

சிஎஸ்கே தோல்விக்கு காரணமான தோனியின் சிக்ஸர்! – தினேஷ் கார்த்திக் சொன்ன விளக்கம்!

1 சதவீதம் சான்ஸ்தான் இருக்கா..! ஜீரோவில் இருந்து ஹீரோ ஆகுங்க! -கோலியின் வீடியோ வைரல்!

சிஎஸ்கேவின் தோல்வியில் முக்கிய காரணம் இவர்தான்..! ஆறுச்சாமி ஷிவம் துபேவை ரவுண்டு கட்டும் ரசிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments