Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தப்பிக்குமா தென் ஆப்பிரிக்கா ? –நியுசிலாந்துக்கு எதிரான போட்டியில் மழை !

Webdunia
புதன், 19 ஜூன் 2019 (15:47 IST)
நியுசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையில் நடக்க இருந்த போட்டி மழையால் பாதிக்கப்பட்டுள்ளது.

உலகக்கோப்பையின் 25 ஆவது போட்டியில் இன்று தென் ஆப்பிரிக்கா மற்றும் நியுசிலாந்து அணிகள் இன்று மோத இருக்கின்றன. இந்த போட்டி தென் ஆப்பிரிக்காவுக்கு வாழ்வா சாவா போட்டியாக அமைந்துள்ளது. ஏற்கனவே 5 போட்டிகளில் விளையாடியுள்ள தென் ஆப்பிரிக்கா அணி 3 போட்டிகளில் தோல்வியும் 1 போட்டியில் வெற்றியும் பெற்றுள்ளது. ஒருப் போட்டியில் மழைக் காரணமாக கைவிடப்பட்டுள்ளது. எனவே மீதியுள்ள 4 போட்டிகளையும் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்குத் தகுதிப் பெற முடியும் என்ற நிலையில் உள்ளது.

இந்நிலையில் இன்று நியுசிலாந்துக்கு எதிராக 6 ஆவது போட்டியை விளையாட இருந்த நிலையில் மைதானத்தில் மழைப் பெய்து வருவதால் டாஸ் போடுவது தாமதமாகியுள்ளது. இதனால் தென் ஆப்பிரிக்காவின் அரையிறுதிக் கனவு மங்கலாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அதிரடி காட்டிய ஆர்சிபி.. ப்ளே ஆப் வாய்ப்பை இழந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்!

ஆர் சி பி அணி நிர்ணயித்த இமாலய இலக்கு… எட்டிப்பிடிக்குமா சி எஸ் கே?

டாஸ் வென்ற சி எஸ் கே எடுத்த முடிவு… வாழ்வா சாவா போட்டியில் வெல்லப் போவது யார்?

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

பெங்களூரிவில் காலையிலிருந்து வெயில்… குஷியான ரசிகர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments