Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெண்கலம் வென்ற பிவி சிந்துவுக்கு ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து!

Webdunia
திங்கள், 2 ஆகஸ்ட் 2021 (06:59 IST)
நேற்று நடைபெற்ற ஒலிம்பிக் பாட்மிண்டன் போட்டியில் மூன்றாவது இடத்துக்கான போட்டியில் பிவி சிந்து அபாரமாக வெற்றி பெற்றார். இதனை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்கள் ’பிவி சிந்து பெருமைக்குரியவர்’ என தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தொலைபேசி மூலம் பிவி சிந்துவுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்
 
அதேபோல் மத்திய அமைச்சர்கள், மாநில முதலமைச்சர்கள், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்பட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தனது வாழ்த்துச் செய்தியில் ’நாட்டிற்காக மேலும் பல காரணங்களை பிவி சிந்து வெள்ள தனது வாழ்த்துக்கள்’ என தெரிவித்துள்ளார்
 
அதேபோல் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் உள்பட பலரும் பிவி சிந்து வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர். பிவி சிந்து பெற்றுக்கொடுத்த வெண்கல பதக்கத்தின் காரணமாக இந்தியா தற்போது இரண்டு பதக்கங்களுடன் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

டி-20 உலகக் கோப்பை தொடர்..! தூதராக யுவராஜ் சிங் நியமனம்.!!

தவறு என்ன என்று உக்காந்து யோசிக்கவேண்டும்… கே கே ஆர் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்!

யாராவது பவுலர்களைக் காப்பாற்றுங்கள் ப்ளீஸ்… கதறிய ரவிச்சந்திரன் அஸ்வின்!

“ரிஸ்க் எடுத்துதான் ஆகணும்… அவரு என்னா அடி அடிக்குறாரு” வெற்றிக்குப் பின்னர் பேசிய ஆட்டநாயகன் பேர்ஸ்டோ!

போன தடவ 900 ரன்கள் அடித்தேன்… அப்பயே என்ன டி 20 உலகக் கோப்பைல எடுக்கல- புலம்பித் தள்ளிய ஷுப்மன் கில்

அடுத்த கட்டுரையில்
Show comments