Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நர்சிங் யாதவிற்கு ஊக்கமருந்து சோதனையால் ரியோ ஒலிம்பிக் வாய்ப்பு கேள்விக்குறி???

நர்சிங் யாதவிற்கு ஊக்கமருந்து சோதனையால் ரியோ ஒலிம்பிக் வாய்ப்பு கேள்விக்குறி???

நர்சிங் யாதவிற்கு ஊக்கமருந்து சோதனையால் ரியோ ஒலிம்பிக் வாய்ப்பு கேள்விக்குறி???
, திங்கள், 25 ஜூலை 2016 (10:45 IST)
இந்திய மல்யுத்த வீரர் நர்சிங் யாதவ் ஊக்கமருந்து சோதனையில் சிக்கியதை அடுத்து, ரியோ ஒலிம்பிக் போட்டியில் அவர் பங்கேற்பது கேள்விக்குறியாகி உள்ளது.


 

 


பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டி ஆகஸ்ட் 50-ஆம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் ஆண்கள் 74 கிலோ எடைபிரிவு மல்யுத்த போட்டியில் பங்கேற்க இந்திய வீரர் நர்சிங் யாதவ் தகுதி பெற்றிருந்தார். இந்த நிலையில், தேசிய ஊக்கமருந்து தடுப்புக் கழகம் சார்பில் நடத்தப்பட்ட ரத்தப் பரிசோதனையில், அவர் தடை செய்யப்பட்ட ஸ்டீராய்டு மருந்து உட்கொண்டது தெரியவந்தது.

அவரிடம் இருந்து மீண்டும் பெறப்பட்ட ‘பி’ மாதிரியின் பரிசோதனை முடிவும் அதை உறுதி செய்தது. இதனால் ரியோ ஒலிம்பிக்கில் நர்சிங் யாதவ் பங்கேற்பது கேள்விக்குறியாகி உள்ளது.

‘நான் எந்த தவறும் செய்யவில்லை. என்னை சிக்கவைப்பதற்காக யாரோ செய்த சதி இது. தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை ஒருபோதும் உட்கொண்டது கிடையாது. இந்த பிரச்னையில் இந்திய ஒலிம்பிக் சங்கம் எனக்கு ஆதரவாக இருக்கும் என நம்புகிறேன்’ என்று நர்சிங் யாதவ் கூறியுள்ளார்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முதல் டெஸ்ட் இந்திய அணி அசத்தல் வெற்றி: அஸ்வின் சுழலில் வீழ்ந்தது மே.இ.தீ.அணி