Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சானியா மிர்சா வெற்றிக்குப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து

சானியா மிர்சா வெற்றிக்குப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
, திங்கள், 27 அக்டோபர் 2014 (18:04 IST)
உலக பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்ற சானியா மிர்சாவுக்குப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

 
முன்னதாக, சிங்கப்பூரில் நடைபெற்ற உலக பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில், இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா–ஜிம்பாப்வேயின் காரா பிளாக் ஜோடி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.
 
டென்னிஸ் சாம்பியன்ஷிப் இரட்டையர் பிரிவில் டாப்–8 ஜோடிகள் பங்கேற்றன. இதில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் சானியா மிர்சா–காராபிளாக் ஜோடி, சூய் பெங்–சு வெய் ஹூசை ஜோடியை நேருக்கு நேர் சந்தித்தது. இதில் சானியா–காரா பிளாக் ஜோடி 6–1, 6–0 என்ற நேர் செட் கணக்கில் பெங்–சு வெய் ஜோடியை வீழ்த்தியது. சானியா மிர்சா வென்ற 22ஆவது சர்வதேச இரட்டையர் பட்டம் இதுவாகும். 
 
இதைத் தொடர்ந்து, சானியா மிர்சாவைப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்தியுள்ளார்.
 
"பெண்கள் டென்னிஸ் அமைப்பின் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற சானியா மிர்சாவுக்கு எனது வாழ்த்துகள். இது இன்னொரு பெருமைக்குரிய தருணமாகும்" என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil