Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடுப்பூசி போடாததால் வாய்ப்பை இழந்த இந்திய வீரர்!

Webdunia
செவ்வாய், 16 நவம்பர் 2021 (14:00 IST)
தமிழகத்துக்காக விளையாடி வரும் முரளி விஜய் தடுப்பூசி போடாததால் சையத் அலி முஷ்டாக் கோப்பை தொடருக்கு தேர்வு செய்யப்படவில்லை என சொல்லப்படுகிறது.

சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடர் இப்போது நடந்து வருகிறது. இந்நிலையில் தமிழக அணியில் இடம்பெற வேண்டிய தொடக்க ஆட்டக்காரர் முரளி விஜய் இந்த தொடரில் இருந்து விலகினார். விலகினாரா அல்லது விலக்கப்பட்டாரா என்ற சந்தேகம் நிலவி வந்தது. இந்நிலையில் இப்போது அவர் விளையாடாததற்கு தடுப்பூசி போட்டுக் கொள்ளாததுதான் காரணம் என சொல்லப்படுகிறது.

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட நபர்கள் மட்டுமே பயோ பபுள் வளையத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் முரளி விஜய் இன்னும் ஒரு டோஸ் கூட செலுத்திக் கொள்ளவில்லையாம். அதனால் அவரை தொடரில் சேர்க்கவில்லை என பிசிசிஐ தரப்பில் விளக்கம் சொல்லப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நான் ஓய்வை அறிவித்துவிட்டால் என்னை நீங்கள் பார்க்க முடியாது… கோலி தடாலடி!

மைதானத்தில் வழங்கிய தரமற்ற உணவால் மயங்கி விழுந்த ரசிகர்..! கர்நாடகா கிரிக்கெட் சங்கம் மீது வழக்குப்பதிவு..!!

“தொடர்ந்து நான்காவது தோல்வி… வீரர்கள் அதை ஒப்புக்கொள்ள வேண்டும்” – சஞ்சு கேப்டன் ஆதங்கம்!

சி எஸ் கே அணியை விட்டு விலகுகிறாரா ஸ்டீபன் பிளமிங்? காசி விஸ்வநாதன் பதில்!

கேப்டன் சாம் கர்ரன் அபார பேட்டிங்.. பஞ்சாப் அணிக்கு ஆறுதல் வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments