Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புரோ கபடி லீக்கில் ரூ.1 கோடிக்கு மேல் ஏலம் போன மோனு கோயத்

Webdunia
வியாழன், 31 மே 2018 (16:07 IST)
இந்தியாவில் நடைபெறும் புரோ கபடி லீக்கின் 6வது சீசனுக்கான வீரர்களின் ஏலத்தில் ரூ1½ கோடிக்கு ஏலம் போனார் மோனு கோயத்.
 
புரோ கபடி லீக் 6-வது சீசன் வரும் அக்டோபர் மாதம் 19ம் தேதி தொடங்கவுள்ளது. இந்த சீசனில் தமிழ் தலைவாஸ், பெங்கால் வாரியர்ஸ், பாட்னா பைரட்ஸ், பெங்களூரு புல்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் உள்ளிட்ட 12 அணிகள் கலந்து கொண்டு விளையாடுகின்றன.
 
இந்த அணிக்களுக்கான வீரர்களின் ஏலம் நேற்று மும்பையில் நடைபெற்றது. இதில் அதிகப்பட்சமாக இந்திய வீரர் மோனு கோயத் அரியானா ஸ்டீலர்ஸ் அணிக்காக ரூ1.51 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியில் விளையாடுவதற்காக தீப்க் ஹூடா ரூ 1.15 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். ஈரான் வீரான பாசெல் அட்ராசாலியை மும்பை அணி ரூ. 1 கோடிக்கு வாங்கியது.
 
இந்த சீசனில் கலந்து கொள்ளும் 12 அணிகளில் 9 அணிகள் ஓட்டுமொத்தமாக 21 வீரர்களை தக்க வைத்துக் கொண்டுள்ளது. அதில் தமிழ் தலைவாஸ் அணியை சேர்ந்த அஜய் தாக்குர், சி.அருண், அமித் ஹுடா ஆகிய 3 பேரும் அடங்குவர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

கில் இன்னிங்ஸுக்கு நடுவே சோம்பேறியாகிவிடுகிறார்… ரிக்கி பாண்டிங் விமர்சனம்!

விராட் கோலி மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்குத் திரும்புவார்- மைக்கேல் கிளார்க் நம்பிக்கை!

ODI –ல் சதமடித்தாலும் பாராட்டமாட்டார்.. ஆனால் டெஸ்ட்டில் 50 ரன்கள் அடித்தாலே…- அப்பா குறித்து ரோஹித் நெகிழ்ச்சி!

விராட் கோலியை கைது செய்ய வேண்டும்..? அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வேலையா? - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

அடுத்த கட்டுரையில்
Show comments