Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரை இறுதிக்கு முன் நாள் வரை ICU-ல் இருந்த ரிஸ்வான்: வைரல் புகைப்படம்!

Webdunia
வெள்ளி, 12 நவம்பர் 2021 (10:25 IST)
அரையிறுதி ஆட்டத்துக்கு முந்தைய தினம் பாகிஸ்தான் வீரர் ரிஸ்வான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருந்தார் என தகவல். 
 
நேற்று நடைபெற்ற பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குச் சென்றது. இந்த போட்டியின் போது பாகிஸ்தான் அணியின் அதிரடி ஆட்டக்காரரான ரிஸ்வான் 52 பந்துகளில் 62 ரன்களை எடுத்து அதிரடி காட்டினார். 
 
போட்டிக்கு பின்னர் பாகிஸ்தான் அணியின் பேட்டிங் ஆலோசகர் மேத்யூ ஹைடன், ஆஸ்திரேலியாவுடனான நேற்றைய அரையிறுதி ஆட்டத்துக்கு முந்தைய தினம் பாகிஸ்தான் வீரர் ரிஸ்வான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருந்தார் என தெரிவித்துள்ளார். மருத்துவமனையில் நுரையீரல் பாதிப்புக்கு சிகிச்சையில் அவர் இருந்தார் என குறிப்பிட்டுள்ளார். 
 
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் கலந்துகொள்வார் என சந்தேகம் எழுந்த நிலையில் ஒரு போர் வீரன் போல ரிஸ்வான் களத்திற்கு வந்தார் என பெருமிதத்துடன் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் உலக கோப்பை செஸ் சாம்பியன் ஆனார் திவ்யா தேஷ்முக்.. குவியும் வாழ்த்துக்கள்..!

முக்கியமான போட்டிகளில் 10 வீரர்களோடு விளையாடுவது பின்னடைவு!… ஐசிசிக்குக் கம்பீர் வேண்டுகோள்!

நம் முடியெல்லாம் நரைப்பதற்கு மரியாதையே இல்லை… கெவின் பீட்டர்சனைக் காட்டமாக விமர்சித்த அஸ்வின்!

அதிக ரன்கள்… அதிக விக்கெட்கள்… இரண்டிலும் கலக்கிய கேப்டன்கள்!

யாரும் அதற்கு ஒத்துக் கொள்ள மாட்டார்கள்… ஸ்டோக்ஸின் முடிவுக்கு கம்பீர் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments