Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரை இறுதிக்கு முன் நாள் வரை ICU-ல் இருந்த ரிஸ்வான்: வைரல் புகைப்படம்!

Webdunia
வெள்ளி, 12 நவம்பர் 2021 (10:25 IST)
அரையிறுதி ஆட்டத்துக்கு முந்தைய தினம் பாகிஸ்தான் வீரர் ரிஸ்வான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருந்தார் என தகவல். 
 
நேற்று நடைபெற்ற பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குச் சென்றது. இந்த போட்டியின் போது பாகிஸ்தான் அணியின் அதிரடி ஆட்டக்காரரான ரிஸ்வான் 52 பந்துகளில் 62 ரன்களை எடுத்து அதிரடி காட்டினார். 
 
போட்டிக்கு பின்னர் பாகிஸ்தான் அணியின் பேட்டிங் ஆலோசகர் மேத்யூ ஹைடன், ஆஸ்திரேலியாவுடனான நேற்றைய அரையிறுதி ஆட்டத்துக்கு முந்தைய தினம் பாகிஸ்தான் வீரர் ரிஸ்வான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருந்தார் என தெரிவித்துள்ளார். மருத்துவமனையில் நுரையீரல் பாதிப்புக்கு சிகிச்சையில் அவர் இருந்தார் என குறிப்பிட்டுள்ளார். 
 
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் கலந்துகொள்வார் என சந்தேகம் எழுந்த நிலையில் ஒரு போர் வீரன் போல ரிஸ்வான் களத்திற்கு வந்தார் என பெருமிதத்துடன் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

டி-20 உலகக் கோப்பை தொடர்..! தூதராக யுவராஜ் சிங் நியமனம்.!!

தவறு என்ன என்று உக்காந்து யோசிக்கவேண்டும்… கே கே ஆர் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்!

யாராவது பவுலர்களைக் காப்பாற்றுங்கள் ப்ளீஸ்… கதறிய ரவிச்சந்திரன் அஸ்வின்!

“ரிஸ்க் எடுத்துதான் ஆகணும்… அவரு என்னா அடி அடிக்குறாரு” வெற்றிக்குப் பின்னர் பேசிய ஆட்டநாயகன் பேர்ஸ்டோ!

போன தடவ 900 ரன்கள் அடித்தேன்… அப்பயே என்ன டி 20 உலகக் கோப்பைல எடுக்கல- புலம்பித் தள்ளிய ஷுப்மன் கில்

அடுத்த கட்டுரையில்
Show comments