Webdunia - Bharat's app for daily news and videos

Install App

15 வருடத்துக்குப் பின்னர் மீண்டும் குத்துச்சண்டைக்கு வரும் மைக் டைசன்!

Webdunia
சனி, 25 ஜூலை 2020 (12:01 IST)
குத்துச் சண்டை உலகின் வீழ்த்த முடியா நாயகன் மைக் டைசன் மீண்டும் போட்டி ஒன்றில் கலந்துகொள்ள இருக்கிறார்.

அமெரிக்காவைச் சேர்ந்த குத்துச் சண்டை வீரரான மைக் டைசன் தான் விளையாடிய 58 போட்டிகளில் 50 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். மேலும் அதில் 44 போட்டிகளில் எதிராளியை நாக் அவுட் செய்து வென்றுள்ளார். மேலும் ரிங்குக்குள் சக வீரரின் காதைக் கடித்து துப்பியது உள்ளிட்ட சர்ச்சைகளிலும் இடம்பிடித்தார். 20 ஆண்டுகால சர்வதேசக் குத்துச் சண்டை வாழ்க்கையை அவர் 2005 ஆம் ஆண்டு முடித்துக் கொண்டார்.

அதன் பின்னர் சில சினிமாக்களில் தலைகாட்டிய அவர், இப்போது 15 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் ஒரு போட்டியில் தன்னுடைய முன்னாள் சக வீரரான, ஜோன்ஸ் ஜீனியுடன் ஒரு போட்டியில் மோத இருக்கிறார். இதனை மைக் டைசனே தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இந்த போட்டியைக் காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments