Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடும்பத்துடன் சுற்றுலா சென்ற மெஸ்ஸி சஸ்பெண்ட்.. கால்பந்து அணி நிர்வாகம் அதிரடி..!

Webdunia
வெள்ளி, 5 மே 2023 (15:10 IST)
உலகின் முன்னணி கால்பந்து விளையாட்டு வீரரான மெஸ்ஸி தகவல் தெரிவிக்காமல் சவுதி அரேபியாவுக்கு தனது குடும்பத்துடன் சுற்றுலா சென்றதை அடுத்து அவரது அணி நிர்வாகம் அவரை சஸ்பெண்ட் செய்துள்ளது. 
 
கால்பந்து வீரர் லயன் மெஸ்ஸி தற்போது பாரிஸ் செயிண்ட் ஜெர்மைன் என்ற அணிக்காக விளையாடி வருகிறார். இந்த நிலையில் அணி நிர்வாகத்திடம் எந்த விதமான தகவலும் தெரிவிக்காமல் சௌதி அரேபியாவுக்கு தனது குடும்பத்துடன் அவர் சுற்றுலா சென்றார். 
 
இதை அடுத்து மெஸ்ஸி இரண்டு வாரங்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்படுவதாக பாரிஸ் செயிண்ட் ஜெர்மைன்  அணியின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் பாரிஸ் செயிண்ட் ஜெர்மைன் அணியிலிருந்து மெஸ்ஸி விலகப் போவதாகவும் அவரை 400  மில்லியன் டாலர்களுக்கு சவுதி அரேபியாவின் அல் ஹிலால் என்ற அணி ஒப்பந்தம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய பௌலர்கள் அபாரம்…. ஜிம்பாப்வே அணி நிர்ணயித்த எளிய இலக்கு!

கோலி, ரோஹித் ஷர்மா ஷர்மா இடத்தைப் பிடிப்பது இலக்கல்ல… கேப்டன் சுப்மன் கில் பேட்டி!

பைனலில் சிறப்பாக பேட் செய்ய முடியும் என்ற நம்பிக்கையே என்னிடம் இல்லை – கோலி பகிர்ந்த தகவல்!

சொந்த மக்களே என்னை வெறுத்தார்கள்… விளையாட்டின் மூலம் பதிலளிக்க வேண்டும் என விரும்பினேன் –ஹர்திக் பாண்ட்யா!

அது சஹாலோட ஐடியாதானே… ரோஹித்தின் ஸ்டைல் வாக் குறித்து கேட்ட பிரதமர் மோடி!

அடுத்த கட்டுரையில்
Show comments