Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆஸ்திரேலிய அணி மேட்ச் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதா? மேக்ஸ்வெல் ஆதங்கம்

Webdunia
புதன், 25 ஜூலை 2018 (12:41 IST)
ஆஸ்திரேலிய அணி மேட்ச் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டது என வெளியாகியிருக்கும் செய்தி எனக்கு வேதனையை அளிக்கிறது என அந்த அணியின் அதிரடி ஆட்டக்காரர் மேக்ஸ்வெல் கூறியுள்ளார்.
கடந்த 2017-ம் ஆண்டில் ராஞ்சியில் நடைபெற்ற இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்கள் 2 பேர் சூதாட்டத்தில் ஈடுபட்டனர் என அல்ஜீரியா ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் அந்த இரண்டு வீரர்கள் குறித்து அந்த செய்தி நிறுவனம் செய்தி வெளியிடவில்லை. ஆனாலும் அது மேக்ஸ்வெல்லாக இருக்கலாம் என பேசப்பட்டது.
 
இந்நிலையில் இதுகுறித்து பேசிய மேக்ஸ்வெல் மேட்ச் ஃபிக்ஸிங் செய்தி என்னை மிகவும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது. அந்த ஆட்டத்தில் நான் சிறப்பாக விளையாடினேன். டெஸ்ட் போட்டியில் நான் முதல் சதம் அடிதேன். அதனை இன்று வரை நினைத்து பெருமைபடுகிறேன். ஆனால் அதனை கெடுக்கும் வகையில் இந்த செய்தி வெளியாகியுள்ளது.
 
இந்த மேட்ச் ஃபிக்ஸிங் செய்தி முழுவதும் தவறானவை. இதில் எந்தவித உண்மையும் இல்லை. நான் ஒருபொழுதும் கிரிக்கெட்டிற்கு எதிராக செயல்பட்டதில்லை என ஆதங்கத்துடன் பேசினார் மேக்ஸ்வெல்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சில போட்டிகள் நம் கூடவே இருக்கும்… அவற்றின் வெற்றி தோல்விகளுக்காக அல்ல… லார்ட்ஸ் போட்டி குறித்து பதிவிட்ட சிராஜ்!

3வது டெஸ்ட் போட்டி.. கேப்டன் கில் இடம் இங்கிலாந்து மன்னர் சார்லஸ் கேட்ட ஒரே ஒரு கேள்வி..

கற்றுக் கொடுப்பதை ஒருபோதும் டெஸ்ட் கிரிக்கெட் நிறுத்தாது- ரிஷப் பண்ட் கருத்து!

பேட்டிங்கில் மட்டுமல்ல.. பவுலிங்கிலும் உலக சாதனை செய்த வைபவ் சூர்யவன்ஷி.. குவியும் வாழ்த்துக்கள்..!

128 ஆண்டுகளுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்.. 2028ல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கும் போட்டிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments