19.2 ஓவரில் மீண்டும் மழை: சிஎஸ்கேவுக்கு இதுதான் இலக்கா?

Webdunia
புதன், 3 மே 2023 (17:52 IST)
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போட்டியில் இன்று சென்னை மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் 19.2 வது ஓவரில் மீண்டும் மழை வந்ததால் போட்டி நிறுத்தப்பட்டது. 
 
இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் லக்னோ பேட்டிங் செய்தது. அந்த அணி 19.2 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 127 ரன்கள் எடுத்த நிலையில் மழை வந்ததால் போட்டி நிறுத்தப்பட்டது.
 
இன்னும் நான்கு பந்துகள் மட்டுமே இருக்கும் நிலையில் மழை நின்றவுடன் மீண்டும் அந்த பந்துகள் போடப்படுமா அல்லது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் செய்யுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 
 
லக்னோ அணியில் ஆயுஷ் பதானி மட்டுமே 59 ரன்கள் எடுத்து அந்த அணிக்கு ஓரளவு ஸ்கோரை சேர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

358 ரன்கள் எடுத்தும் தோல்வி ஏன்? கேப்டன் கே.எல்.ராகுல் கூறும் காரணம்..!

அதிக சதமடித்து சாதனை: சச்சின் சாதனையை முறியடித்த விராத் கோஹ்லி..

கோஹ்லி, ருத்ராஜ் சதம் வீண்.. கடைசி ஓவரில் தென்னாப்பிரிக்கா த்ரில் வெற்றி..

கோலி, ருத்ராஜ் சதம்.. கே.எல்.ராகுல் அரைசதம்.. 350 ரன்களை தாண்டிய இலக்கு..!

ருத்ராஜ் அபார சதம்.. சதத்தை நெருங்கிய விராத் கோலி.. இந்தியாவின் ஸ்கோர் எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments