Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காபா டெஸ்ட் வெற்றியின் போது கண்ணீர் விட்டு அழுதேன்… முன்னாள் இந்திய வீரர் உருக்கம்!

Webdunia
புதன், 3 பிப்ரவரி 2021 (11:01 IST)
அண்மையில் ஆஸ்திரேலியாவில் நடந்த பார்டர் கவாஸ்கர் கோப்பையை இந்திய அணி வெற்றி பெற்று சாதனை படைத்தது.

ஆஸ்திரேலியாவில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பார்டர் கவாஸ்கர் கோப்பையை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. அனுபவம் இல்லாத இளம் வீரர்களைக் கொண்டு ரஹானே பெற்ற இந்த வெற்றியை பல முன்னாள் இந்திய வீரர்களும் பாராட்டியுள்ளனர். இந்நிலையில் ஆஸி அணிக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய விவிஎஸ் லஷ்மன் இதுகுறித்து உணர்ச்சிப் பூர்வமாக பேசியுள்ளார்.

அதில் ‘காபா டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் ஆட்டத்தை தொலைக்காட்சியில் நான் என் குடும்பத்தோடு அமர்ந்து பார்த்தேன். பண்ட்டும் சுந்தரும் விளையாடும் போது மிகவும் பதற்றமாக இருந்தேன். காபா போட்டிக்கு முன்பு பலரும் கணித்தது வேறு ஆனால் நடந்தது வேறாக இருந்தது.  நான் இரண்டு முறை ஆனந்த கண்ணீர் விட்டிருக்கிறேன். 2011 ஆம் ஆண்டு உலகக்கோப்பை வென்ற போது, காபா டெஸ்ட்டை வென்ற போதும். ’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சில விஷயங்கள் முன்பே எழுதப்பட்டுவிட்டன… ஷுப்மன் கில்லைப் பாராட்டிய யுவ்ராஜ் சிங்!

கோலி மேல் வன்மத்தைக் கொட்டிய சஞ்சய் மஞ்சரேக்கர்… ரசிகர்கள் கோபம்!

இங்கிலாந்தில் கோலியின் சராசரி இவ்வளவுதான்… கிண்டல் செய்த முன்னாள் கேப்டன்!

ஓட விருப்பம் இல்லன்னா சத்தமா ‘no’ சொல்லு… கில்லிடம் கடிந்து கொண்ட ஜெய்ஸ்வால்.!

இளம் கன்று பயமறியாது… இங்கிலாந்து பவுலர்களுக்கு பேட் மூலம் பதில் சொன்ன ஜெய்ஸ்வால் & கில்!

அடுத்த கட்டுரையில்
Show comments