Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேலைக்கார தோனி: தலைமறைவான லலித் மோடி சீண்டல்!!

Webdunia
செவ்வாய், 9 மே 2017 (12:27 IST)
முன்னாள் ஐபிஎல் தலைவர் லலித் மோடி, தோனியை இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் வேலை செய்யும் வேலைக்காரன் என கூறிப்பிட்டுள்ளார். 


 
 
முன்னாள் ஐபிஎல் தலைவர் லலித் மோடி, ஐபிஎல் தொடரில் கோடிக்கணக்கில் மோசடி செய்து இங்கிலாந்தில் தலைமறைவாக வாழ்ந்து வருகிறார். 
 
இந்நிலையில், சீனிவாசனின் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் இருந்து தோனிக்கு 2012-ல் வழங்கப்பட்ட ஆஃபர் லெட்டரை லலித் மோடி வெளியிட்டுள்ளார்.
 
அதில், தோனி மாத சம்பளம் வாங்கும் ஊழியர் என குறிப்பிடப்பட்டு, மாதம் அவரின் மொத்த சம்பளமாக ரூ.60,000 குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இதுதவிர, தோனியின் பொழுதுபோக்கு ஊதியமாக ரூ. 4,500, பேப்பர் செலவுக்காக ரூ.175, கரண்டு பில், தண்ணீர், சமையல் கேஸ் உள்ளிட்டவைகளுக்கான செலவுகளை தோனி தனது சம்பளத்தில் பெற்றுக்கொள்ளும் வசதியும் அளிக்கப்பட்டுள்ளது.
 
இந்த செய்து தற்போது சர்ச்சைக்குள்ளாகி உள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் போட்டிகளில் பேட்ஸ்மேன்களின் பேட் அளவை அளக்கும் நடுவர்கள்… காரணமென்ன?

விக்கெட் கீப்பிங்கில் இரட்டை சதம் அடித்த தோனி… புதிய சாதனை!

எனக்கு எதுக்கு ஆட்டநாயகன் விருது… அதுக்கு தகுதியானவர் அவர்தான் – தோனி ஓபன் டாக்!

தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி.. பொறுமையை சோதித்த ஷிவம் துபே.. தோனி அதிரடியால் சிஎஸ்கே வெற்றி..!

டாஸ் வென்ற தோனி, போட்டியையும் வென்று கொடுப்பாரா? ஆடும் 11 வீரர்களின் விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments