Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினியிடம் வாழ்த்து பெற்ற கிரிக்கெட் வீரர்கள்

Webdunia
வெள்ளி, 13 ஜூலை 2018 (21:03 IST)
தமிழ்நாடு பிரிமியர் லீக் என்ற டி.என்.பி.எல் போட்டிகள் சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று முன் தினம் நடைபெற்ற முதல் போட்டியில் திண்டுக்கல் அணியை திருச்சி அணி 4 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 
இந்த நிலையில் இன்று திண்டுக்கல் மற்றும் மதுரை அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த மதுரை அணியினர் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 169  ரன்கள் எடுத்துள்ளனர். இன்னும் சிறிது நேரத்தில் திண்டுக்கல் அணியினர் பேட்டிங் செய்ய உள்ளனர்.
 
இந்த நிலையில் இன்று சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டிற்கு அபினவ் முகுந்த் தலைமையிலான கோவை அணி வீரர்கள் சென்று நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அதுமட்டுமின்றி வீரர்கள் அனனவரும் ரஜினியுடன் குரூப் புகைப்படமும் எடுத்து கொண்டனர்.  சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்தை சந்தித்தது மகிழ்ச்சி அளித்தாக லைகா கோவை கிங்ஸ் அணி கேப்டன் முகுந்த் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்

தொடர்புடைய செய்திகள்

டி-20 உலகக் கோப்பை தொடர்..! தூதராக யுவராஜ் சிங் நியமனம்.!!

தவறு என்ன என்று உக்காந்து யோசிக்கவேண்டும்… கே கே ஆர் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்!

யாராவது பவுலர்களைக் காப்பாற்றுங்கள் ப்ளீஸ்… கதறிய ரவிச்சந்திரன் அஸ்வின்!

“ரிஸ்க் எடுத்துதான் ஆகணும்… அவரு என்னா அடி அடிக்குறாரு” வெற்றிக்குப் பின்னர் பேசிய ஆட்டநாயகன் பேர்ஸ்டோ!

போன தடவ 900 ரன்கள் அடித்தேன்… அப்பயே என்ன டி 20 உலகக் கோப்பைல எடுக்கல- புலம்பித் தள்ளிய ஷுப்மன் கில்

அடுத்த கட்டுரையில்
Show comments