Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய சாதனை படைக்க 43 ரன்களுக்காக காத்திருக்கும் கோலி!!

Webdunia
வெள்ளி, 18 நவம்பர் 2016 (10:08 IST)
இந்திய டெஸ்ட் அணி கேப்டன் விராட் கோலி, இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரில் அசத்தி வருகிறார்.


 
 
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் தொடங்கியது. இந்த போட்டியின் முதல் நாள் ஆட்டம் முடிவில் இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 317 ரன்கள் குவித்தது.
 
இதில் கோலி மற்றும் புஜாரா சதம் அடித்தனர். கோலி 151 ரன்களுடனும், புஜாரா 119 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
 
இந்நிலையில், தற்போது நடைபெற்று வரும் ஆட்டத்தில் கோலி மேலும் 49 ரன்கள் எடுத்து இரட்டை சதம் அடித்தால் ஒரே வருடத்தில் மூன்று இரட்டை சதங்கள் விளாசிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைப்பார்.
 
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்த கோலி, கடந்த மாதம் நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்தூரில் நடைபெற்ற டெஸ்டிலும் இரட்டை சதம் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக 157 ரன்கள் எடுத்துள்ள கோலி இரட்டை சதம் விளாசி புதிய சாதனை படைக்க காத்திருக்கிறார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சில போட்டிகள் நம் கூடவே இருக்கும்… அவற்றின் வெற்றி தோல்விகளுக்காக அல்ல… லார்ட்ஸ் போட்டி குறித்து பதிவிட்ட சிராஜ்!

3வது டெஸ்ட் போட்டி.. கேப்டன் கில் இடம் இங்கிலாந்து மன்னர் சார்லஸ் கேட்ட ஒரே ஒரு கேள்வி..

கற்றுக் கொடுப்பதை ஒருபோதும் டெஸ்ட் கிரிக்கெட் நிறுத்தாது- ரிஷப் பண்ட் கருத்து!

பேட்டிங்கில் மட்டுமல்ல.. பவுலிங்கிலும் உலக சாதனை செய்த வைபவ் சூர்யவன்ஷி.. குவியும் வாழ்த்துக்கள்..!

128 ஆண்டுகளுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்.. 2028ல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கும் போட்டிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments