Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எனக்கு டெஸ்ட் போட்டியும் பிடிக்காது, இவரையும் பிடிக்காது: யாரை கூறுகிறார் கோலி?

Webdunia
திங்கள், 4 டிசம்பர் 2017 (16:39 IST)
இந்தியா இலங்கைக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி டெல்லியில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. நேற்று நடந்த இரண்டாம் நாள் போட்டிக்கு பின்னர் கோலி ஒரு பேட்டியளித்திருந்தார். 
 
இந்த பேட்டியில், புஜாரா, கோலியை பேட்டி எடுத்தார். இந்த பேட்டியில் சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து கொண்டார் கோலி. தனது முதல் கேள்வியாக புஜாரா, கோலியிடம் இரட்டை சதம் குறித்து கேள்வி எழுப்பினார். 
 
எனக்கு செஞ்சுரிகள் அடிக்க பிடிக்கும். அதை அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து கொண்டே வருகிறேன். எப்போதும் செஞ்சுரி எடுத்தவுடன் போதும் என்று விட மாட்டேன். அதைவிட அதிக ரன்கள் எடுக்கவே முயற்சி செய்வேன் என்று கோலி பதிலளித்தார்.
 
இதனை தொடர்ந்து கோலி, எனக்கு புஜாராவை பிடிக்காது. அவர் எல்லா போட்டியிலும் என்னை வென்றுவிடுகிறார். டென்னிஸ், கால் பந்து என எல்லாவற்றிலும் அவர் வெற்றி பெறுகிறார். அவருடன் விளையாடுவது கஷ்டமாக இருக்கிறது என்று கூறினார். 
 
எனக்கு துவக்கத்தில் டெஸ்ட் போட்டிகளில் விளையாட பிடிக்காது. இப்போது நான் பொறுமையாக அதிக நேரம் களத்தில் இருக்க காரணம் புஜாரா. அவரிடம் பொறுமையாக இருக்க கற்று கொண்டேன் என்றும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments