Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓய்வு எப்போது ? கோலி சூசகமான பதில் ! அதிர்ச்சியான ரசிகர்கள் !

Webdunia
வியாழன், 20 பிப்ரவரி 2020 (14:15 IST)
இந்திய அணியின் கேப்டன் கோலி இன்னும் 3 ஆண்டுகள் எல்லாவிதமான போட்டிகளிலும் விளையாடுவேன் எனக் கூறியிருப்பது ரசிகர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அணி உலக கிரிக்கெட் விளையாடும் அணிகளில் அதிகளவிலான போட்டிகளில் விளையாடி வருகிறது. இதன் காரணமாக வீரர்களின் உடல்நிலை மோசமடையும் சூழ்நிலை உருவாகிறது. இதைப் பற்றி கோலி முன்பே பேசியுள்ள நிலையில் இப்போது மீண்டும் இது குறித்து பேசியுள்ளார்.

அதில் ‘ஒரு ஆண்டில் 300 நாட்களை கிரிக்கெட்டுக்காக நாங்கள் செலவிடுகிறோம். இதனால் வீரர்களின் உடல் வலிமை பாதிக்கப்படும். இப்போது இருப்பது போலவே எப்போதும் உடல் தாங்காது. அடுத்த 3 ஆண்டுகளுக்கு இந்தியா முக்கியமான உலகக்கோப்பைத் தொடர்களில் விளையாட உள்ளது. அதுவரை அனைத்து விதமானப் போட்டிகளிலும் விளையாடுவேன். அதன் பின்னர் ஏதாவது ஒரு வடிவிலான போட்டியில் இருந்து விலகுவது குறித்து யோசிப்பேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

இது இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் RCB அணிக்குள் வருவேனா?... டிவில்லியர்ஸ் அளித்த பதில்!

தோனி, ரோஹித் சர்மாவை விட சுப்மன் கில் சிறந்தவர்: சேவாக் மகன் ஆர்யாவீர் சர்ச்சை கருத்து..!

ட்ரீம் 11 உடனான உறவை முறித்துக் கொள்கிறோம்… பிசிசிஐ தரப்பு பதில்!

இந்தியக் கிரிக்கெட் அணியின் டைட்டில் ஸ்பான்சராக தொடர விருப்பமில்லை… பிசிசிஐயிடம் தெரிவித்த Dream 11

42 பந்துகளில் சதமடித்த சஞ்சு சாம்சன்.. ஆசிய கோப்பையிலும் அசத்துவாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments