கோலிக்கு தலைவலி கொடுக்கும் ரோகித்?

Webdunia
வெள்ளி, 8 டிசம்பர் 2017 (16:10 IST)
இந்தியா வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி, 3 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. 
 
இலங்கை தொடருக்கு பின், தென் ஆப்ரிக்கா செல்லும் இந்திய அணி 3 டெஸ்ட், 6 ஒருநாள், 3 டி-20 தொடர்களில் பங்கேற்கவுள்ளது. இந்திய அணிக்கு, உண்மையான சோதனை தென் ஆப்ரிக்க மண்ணில்தான் காத்திருக்கிறது. 
 
தென் ஆப்ரிக்க ஆடுகளங்கள் வேகப்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் என்பதால், நான்கு பவுலர்களுடன் ஒரு ஆல் ரவுண்டர் இருந்தால் சிறப்பாக இருக்கும் என வல்லுனர்கள் தெரிவித்து வருகின்றனர். 
 
அணியில் ரோகித் சர்மா வருகையால் இந்திய டெஸ்ட் அணியில் நம்பர் 6 வீரராக யாரை களமிறக்குவது என கேப்டன் கோலிக்கு மிகப்பெரிய தலைவலி ஏற்பட்டுள்ளது. பாண்டியா பேட்டிங் மற்றும் பவுலிங்கிலும் கைகொடுத்து வருகிறார். எனவே, யாரை எங்கு களமிறக்குவது என தலையை பிய்த்துக்கொள்கிறாராம் கோலி. இந்த அணியை வைத்து உலக கோப்பைக்கு ஒத்திகை பார்க்கும் கோலிக்கு இது பெரிய தலைவலிதான்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் விராத் கோஹ்லி டக் அவுட்.. நிதானமாக விளையாடும் ரோஹித் சர்மா.. இந்தியா ஸ்கோர்..!

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா எடுத்த அதிரடி முடிவு.. தொடரை இழக்காமல் தடுக்குமா இந்தியா?

அஸ்வினுக்குப் பதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணையும் தமிழக வீரர்!

எம்.எஸ். தோனியின் சாதனைக்கு குறி வைத்த விராட் கோலி! நாளை அந்த சாதனை நிகழுமா?

கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக… 50 ஓவர்களையும் ஸ்பின்னர்களை வீச வைத்த பங்களாதேஷ்!

அடுத்த கட்டுரையில்
Show comments