கோஹ்லி ஸ்கூப், புஜாரா போல்டு – ஆட்டத்தை மாற்றிய இரு பந்துகள்

Webdunia
வியாழன், 27 டிசம்பர் 2018 (08:35 IST)
சிறப்பாக விளையாடி சதத்தை நோக்கி சென்று கொண்டிருந்த இந்திய கேப்டன் கோஹ்லி 82 ரன்களில் அவுட் ஆனார்.

நேற்று மொல்போர்னில் தொடங்கிய மூன்றாவது டெஸ்டில் டாஸ் வென்ற இந்தியக் கேப்டன் விராட் கோஹ்லி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடிய இந்திய அணி முதல் நாள் ஆட்டமுடிவில் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்களை சேர்த்திருந்தது. புஜாரா 68 ரன்களோடும் கோஹ்லி 47 ரன்களோடும் களத்தில் இருந்தனர்.

தொடர்ந்து இன்று 2 ஆம் நாளை ஆடிய இந்திய அணி உணவு இடைவேளை வரை விக்கெட் இழப்பின்றி சிறப்பாக விளையாடியது. புஜாரா சிறப்பாக விளையாடி தனது 17 ஆவது சதத்தைப் பூர்த்தி செய்தார். உணவு இடைவேளைக்குப் பிறகு களமிறக்கிய இந்திய அணிக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக கோஹ்லி மற்றும் புஜாராவை ஸ்டார்க் மற்றும் கம்மின்ஸ் ஆவுட் ஆக்கி வெளியேற்றினர்,

சிறப்பாக விளையாடி சதத்தை நோக்கி சென்று கொண்டிருந்த கோஹ்லி ஸ்டார்க் வீசிய பவுன்சரை தேவையில்லாமல் ஸ்கூப் செய்ய அது தேர்டு மேன் திசையில் இருந்த பிஞ்ச் கையில் தஞ்சம் புகுந்தது. இதனால் 82 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பின் சிறிது நேரத்தில் புஜாராவும் கம்மின்ஸ் பந்தில் போல்டு ஆகி வெளியேறினார்.

தற்போது ரஹானே 5 ரன்களோடு ரோஹித் ஷர்மா அரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் விளையாடி வருகின்றனர். இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 299 ரன்கள் சேர்த்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு ஓப்பனிங் வாய்ப்பு கொடுங்கள்: ஆகாஷ் சோப்ரா பரிந்துரை..!

350 என்ற இலக்கை நெருங்கி பயம் காட்டிய தென் ஆப்பிரிக்கா.. ரசிகர்களுக்கு ஒரு த்ரில் போட்டி..!

விராத் கோலி அபார சதம்.. ரோஹித் சர்மா அரைசதம்.. 300ஐ தாண்டிய இந்தியாவின் ஸ்கோர்..!

இந்தியா தென்னாபிரிக்கா முதல் ஒருநாள் போட்டி.. டாஸ் வென்றது யார்? ஆடும் லெவனில் யார் யார்?

12 பந்துகளில் அரைசதம்.. 32 பந்துகளில் சதம்.. அபிஷேக் சர்மா அதிரடி ஆட்டம்..

அடுத்த கட்டுரையில்
Show comments