Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கே.எல்.ராகுல் அவுட்டே இல்லையா? அதிர்ச்சி தகவல்

Webdunia
திங்கள், 25 அக்டோபர் 2021 (07:25 IST)
கே.எல்.ராகுல் அவுட்டே இல்லையா? அதிர்ச்சி தகவல்
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நேற்று டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்த நிலையில் இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி நேற்று மிக அபாரமாக 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது
 
நேற்றைய போட்டியின் ஆட்டநாயகனாக சாகித் அப்ரிடியின் தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா மற்றும் கே எல் ராகுல் விக்கெட் எடுப்பது மட்டுமின்றி கேப்டன் விராட் கோலியின் விக்கெட்டுகள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தற்போது கேஎல் ராகுல் விக்கெட் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. சாகித் அப்ரிடி பந்துவீசும் போது அவரது கால்கள் கிரீச்க்க்கு வெளியே இருந்ததாகவும் ஆனால் அதனை சரியாக கவனிக்காமல் அம்பயர் அவுட் கொடுத்துவிட்டதாகவும் இந்திய ரசிகர்கள் தங்களது ஆதங்கத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்
 
இந்தியா பாகிஸ்தான் போட்டியின் போது அவர் தூங்கிவிட்டதாக நெட்டிசன்கள் பதிவு செய்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த புகைப்படங்களையும் நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. கே.எல்.ராகுல் விக்கெட் நேற்று காப்பாற்றப்பட்டு இருந்தால் நேற்றைய போட்டி மாறியிருக்கும் என்றும் நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

இந்திய குத்துச்சண்டை வீராங்கனை சஸ்பெண்ட்.. ஒலிம்பிக்கில் பங்கேற்க முடியாத சோகம்..!

இதுதான் மும்பைக்காக கடைசி போட்டி… ரோஹித் அவுட் ஆனதும் மும்பை ரசிகர்கள் செய்த மரியாதை!

எவ்ளோ மழை பெய்தாலும் 15 நிமிசத்துல தண்ணீரை வடிகட்டலாம்… சின்னசாமி மைதானத்துல இப்படி ஒரு வசதி இருக்கா?

இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் யார்?... லிஸ்ட்டில் இந்த இந்திய அணி வீரரும் இருக்கிறாரா?

கடைசி போட்டியில் ஆறுதல் வெற்றி பெற்ற லக்னோ.. போராடி தோற்ற மும்பை இந்தியன்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments