Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விடாமல் துரத்திய அஸ்வின்; பஞ்சாப் அணி போராடி தோல்வி

Webdunia
சனி, 12 மே 2018 (19:45 IST)
கொல்கத்தா அணி கொடுத்த இமாலய இலக்கை எட்ட முடியாமல் பஞ்சாப் அணி போராடி தோல்வி அடைந்தது. 

 
கொல்கத்தா - பஞ்சாப் அணிகள் இடையே நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச முடிவு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய கொல்கத்தா 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 245 ரன்கள் எடுத்தது. 
 
நரைன் மற்றும் கேப்டன் தினேஷ் கார்த்திக் அதிரடியாக விளையாடினர். இதைத்தொடர்ந்து 246 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது. தொடக்க வீரராக ராகுல் அதிரடியாக விளையாடினார். 29 பந்துகளில் 66 ரன்கள் குவித்திருந்தபோது ஆட்டமிழந்தார். 
 
கெயில் 21 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய மாயனக் அகர்வால் டக் ஆவுட் ஆனார். கருண் நாயர் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். அரோன் பிஞ்ச் அதிரடியாக விளையாடினாலும் 34 ரன்களில் ஆட்டமிழந்தார்.
 
கேப்டன் அஸ்வின் வெற்றி பெற முடியாது என்ற நிலையிலும் அதிரடியாக விளையாடி கடுமையாக போராடினார். அஸ்வின் 22 பந்துகளில் 45 ரன்கள் குவித்தார். பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் குவித்தது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சக்கர நாற்காலியில் வந்து வீரர்களுக்கு ஆலோசனைக் கொடுத்த டிராவிட்!

கடந்த ஒராண்டில் ஸ்ரேயாஸின் வளர்ச்சி… கங்குலி பாராட்டு!

ஊசிக்கு ஊசி எதிர்முனை பாயுமா? இன்று KKR - RR தீவிர மோதல்! முதல் வெற்றி யாருக்கு?

ஹெட் & அபிஷேக் ஷர்மாவ விட இவங்கதான் ஆபத்தான தொடக்க வீரர்கள்.. சுரேஷ் ரெய்னா பாராட்டு!

என் சதம் முக்கியமில்ல.. அடிச்சு தூள் கிளப்பு – அணி வீரருக்கு உத்வேகம் கொடுத்த ஸ்ரேயாஸ் ஐயர்!

அடுத்த கட்டுரையில்
Show comments