Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெண்கலம் வென்ற தீபிகா பல்லிக்கல்லுக்கு ரூ.20 லட்சம் வெகுமதி - ஜெயலலிதா அறிவிப்பு

Webdunia
திங்கள், 22 செப்டம்பர் 2014 (16:37 IST)
தென்கொரியாவின் இன்சியான் நகரில் நடைபெற்று வரும் 17ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஸ்குவாஷ் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற தீபிகா பல்லிக்கல்லுக்கு ரூ.20 லட்சம் வெகுமதியை ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
 
இது தொடர்பாக அவர், தீபிகா பல்லிக்கல்லுக்கு எழுதிய கடிதத்தில், நீங்கள் எங்கள் அனைவரையும் மீண்டும் ஒரு முறை பெருமிதம் கொள்ளச் செய்துள்ளீர்கள். உங்கள் சாதனைக்காகத் தமிழக மக்களின் சார்பில் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
 
2011 டிசம்பரில் நான் அறிவித்தபடி, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வெல்பவருக்கு ரூ.20 லட்சம் அளிக்கப் படும். தமிழக அரசிடமிருந்து இந்த விருதினை நீங்கள் பெறுவீர்கள்.
 
உங்களையும் உங்கள் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தவர்களையும் வாழ்த்துவதோடு, எதிர்காலத்தில் மேலும் பல வெற்றிகளை அடைய, இந்தியாவின் சார்பிலும் தமிழகத்தின் சார்பிலும் வாழ்த்துகிறேன்.
 
இவ்வாறு ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இந்திய குத்துச்சண்டை வீராங்கனை சஸ்பெண்ட்.. ஒலிம்பிக்கில் பங்கேற்க முடியாத சோகம்..!

இதுதான் மும்பைக்காக கடைசி போட்டி… ரோஹித் அவுட் ஆனதும் மும்பை ரசிகர்கள் செய்த மரியாதை!

எவ்ளோ மழை பெய்தாலும் 15 நிமிசத்துல தண்ணீரை வடிகட்டலாம்… சின்னசாமி மைதானத்துல இப்படி ஒரு வசதி இருக்கா?

இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் யார்?... லிஸ்ட்டில் இந்த இந்திய அணி வீரரும் இருக்கிறாரா?

கடைசி போட்டியில் ஆறுதல் வெற்றி பெற்ற லக்னோ.. போராடி தோற்ற மும்பை இந்தியன்ஸ்!

Show comments