Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அத்துமீறி மைதானத்துக்குள் நுழைந்த ஜார்வோவுக்கு வாழ்நாள் தடை!

Webdunia
புதன், 22 செப்டம்பர் 2021 (09:53 IST)
இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் ஜார்வோ.

நடந்து வரும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் வீரர்களுக்கு இடையிலான ஸ்லெட்ஜிங் ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் ஜார்வோ என்ற நபரும் கவனம் ஈர்த்துள்ளார். இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் ஜெர்ஸியை அணிந்து மைதானத்துக்கு வந்து பேட் செய்வேன் என அடம்பிடித்தார். அப்போது அவரைக் காவலாளிகள் அங்கிருந்து அகற்றினர்.

அதேபோல மூன்றாவது டெஸ்டிலும் முழு கிட் மற்றும் ஹெல்மெட் அணிந்து வந்து பேட் செய்வேன் என மீண்டும் அடம்பிடித்தார். அப்போதும் காவலர்கள் அவரை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். இந்நிலையில் நேற்று இந்திய அணி பந்து வீசிக் கொண்டிருந்த போது உள்ளே நுழைந்த அவர் தான் பந்துவீசுவேன் எனக் கூறி அடம்பிடித்துள்ளார். அப்போது விளையாடிக் கொண்டிருந்த பேர்ஸ்டோ மீதும் மோதினார். இதையடுத்து அவரைக் கைது செய்த போலிஸார் மைதானத்தில் இருந்து அப்புறப்படுத்தினர். ஜார்வோவின் தொல்லையால் போட்டி 5 நிமிடம் தடைபட்டது. 

இந்நிலையில் இப்போது ஜார்வோவுக்கு மைதானத்தில் நுழைய வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளதாம். இது சம்மந்தமாக அவர் தனது யுடியூப் சேனலில் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று தொடங்குகிறது பாண்டிச்சேரி ப்ரீமியர் லீக் சீசன் 2!

200 ரன்கள்தான் இலக்கு… அடுத்த போட்டியில்… வைபவ் சூர்யவன்ஷியின் ஆசை!

வெற்றியை மட்டுமே யோசிக்க நாங்கள் முட்டாள்கள் அல்ல.. டிரா குறித்து பயிற்சியாளர் மார்கஸ்

எல்லா பாராட்டுகளுக்கும் தகுதியானவன்… பிரின்ஸை வாழ்த்திய கிங் கோலி!

‘டேய் அவன் எப்படி போட்டாலும் அடிக்கிறான்டா’ எனக் கதறும் பவுலர்கள்.. 52 பந்துகளில் சதமடித்து அசத்திய சூர்யவன்ஷி!

அடுத்த கட்டுரையில்
Show comments