Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கங்குலி உடல்நிலை சீராக உள்ளது… ஜெய்ஷா அறிவிப்பு!

Webdunia
சனி, 2 ஜனவரி 2021 (17:13 IST)
நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சௌவ்ரவ் கங்குலியின் உடல்நிலை சீராக உள்ளதாக ஜெய்ஷா அறிவித்துள்ளார்.

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் சவுரவ் கங்குலி தற்போது பிசிசிஐ தலைவராக இருக்கிறார். அவர் தலைமையில் அமீரகத்தில் கொரோனா காலத்திலும் ஐபிஎல் தொடர் சிறப்பாக நடத்தப்பட்டது. இந்நிலையில் இன்று காலை கொல்கத்தாவில் அவர் வீட்டில் உடற்பயிற்சி மேற்கொண்டிருந்த போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. அதையடுத்து அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

கங்குலிக்கு ஹார்ட் சம்பந்தமான பிரச்சனை உள்ளதால் அவருக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பிசிசிஐ செயலர் ஜெய் ஷா ‘கங்குலி விரைவாக மீண்டு வர வேண்டும். அவரின் குடும்பத்தினருடன் பேசினேன். தாதாவின் உடல்நிலை சீராக உள்ளது. சிகிச்சைக்கு அவர் உடல்நிலை நன்கு ஒத்துழைக்கிறது’ எனவும் அவர் கூறியுள்ளார். முன்னாள் வீரர்கள் பலர் அவர் சீக்கிரமே குணமாகவேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்து டிவீட் செய்துள்ளனர்.

 

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments