காயம் ஆற 4 முதல் 6 வாரங்கள் ஆகும்… இங்கிலாந்து தொடரிலும் ஜடேஜா இல்லை!

Webdunia
திங்கள், 11 ஜனவரி 2021 (09:41 IST)
சிட்னி டெஸ்ட்டில் காயமான ரவிந்தர ஜடேஜா இங்கிலாந்துக்கு எதிரான தொடரின் இரண்டு போட்டிகளில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய வீரர் ஜடேஜா 4 விக்கெட்களை வீழ்த்தி கலக்கினார். ஆனால் பேட்டிங் செய்யும் போது அவர் கைவிரலில் பட்டு காயமடைந்தார். இதனால் அவர் இரண்டாவது இன்னிங்ஸில் பந்து வீசவில்லை. மேலும் நான்காவது போட்டியில் இருந்தும் விலகியுள்ளார். இது இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது.

இந்நிலையில் ஜடேஜாவின் காயம் குறித்து பிசிசிஐ அறிவித்துள்ளது. அதில் ஜடேஜாவின் காயம் ஆற 4 முதல் 6 வாரங்கள் ஆகும் என்பதால் அவர் பிப்ரவரி மாதம் நடக்கும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் விளையாடமாட்டார் என அறிவித்துள்ளது. இன்றைய போட்டியில் அவர் இறங்குவதற்கான தேவை ஏற்பட்டால் வலி நிவாரணி ஊசி போட்டுக்கொண்டு இறங்குவார் என சொல்லப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டி.. 102 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி..!

தென்னாப்பிரிக்கா அணிக்கு திரும்பும் டேவிட் மில்லர்.. இந்திய அணியில் சுப்மன் கில்- ஹர்திக்.. இன்று முதல் டி20 போட்டி..!

உணர்ச்சிகளை வெளிப்படுத்தினால் கிரிக்கெட் வீரர்களுக்கு மரியாதை கிடைக்காது: அஸ்வின்

ஐபிஎல் மினி ஏலம்: 350 வீரர்களுடன் இறுதிப் பட்டியல் வெளியீடு!

சஞ்சு சாம்சனுக்கு பதில் ஷுப்மன் கில் துவக்க ஆட்டக்காரர்: மாற்றம் ஏன்? சூர்யகுமார் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments