Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐ.எஸ்.எல் கால்பந்து போட்டி: கோவா-நார்த் ஈஸ்ட் போட்டி டிரா!

Webdunia
வெள்ளி, 1 நவம்பர் 2019 (21:35 IST)
கடந்த சில நாட்களாக ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டி தொடரில் சென்னை அணி 3 போட்டிகளில் விளையாடி இரண்டில் தோல்வியும் ஒன்றில் டிராவும் செய்து கிட்டத்தட்ட கடைசி இடத்தில் உள்ளது
 
இந்த நிலையில் இன்று நார்த் ஈஸ்ட் யூனைடெட் மற்றும் கோவா அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இரு அணி வீரர்களும் ஆக்ரோஷமாக வெற்றி பெறும் நோக்கில் விளையாடினர். 
 
முதல் பாதியின் முடிவில் கோவா அணி 1-0 என்று முன்னணியில் இருந்தாலும் இரண்டாம் பாதியில் சுதாரித்து விளையாடிய  நார்த் ஈஸ்ட் யூனைடெட் அணி 54வது நிமிடத்திலும் 74வது நிமிடத்திலும் தொடர்ந்து இரண்டு கோல்கள் போட்டது. இதனையடுத்து ஆட்டநேர இறுதியில் கோவா ஒரு கோல் அடித்து போட்டியை டிரா செய்தது
 
இன்றைய போட்டியின் முடிவுக்கு பின் கொல்கத்தா, ஜாம்ஷெட்பூர், கோவா,  நார்த் ஈஸ்ட் யூனைடெட், மும்பை ஆகிய அணிகள் முதல் ஐந்து இடங்களில் உள்ளன என்பதும் சென்னை அணி 9வது இடத்தில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது,

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

கில் இன்னிங்ஸுக்கு நடுவே சோம்பேறியாகிவிடுகிறார்… ரிக்கி பாண்டிங் விமர்சனம்!

விராட் கோலி மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்குத் திரும்புவார்- மைக்கேல் கிளார்க் நம்பிக்கை!

ODI –ல் சதமடித்தாலும் பாராட்டமாட்டார்.. ஆனால் டெஸ்ட்டில் 50 ரன்கள் அடித்தாலே…- அப்பா குறித்து ரோஹித் நெகிழ்ச்சி!

விராட் கோலியை கைது செய்ய வேண்டும்..? அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வேலையா? - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

அடுத்த கட்டுரையில்
Show comments