Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் 2019: குவாலிஃபயர் மற்றும் இறுதிப்போட்டி நடைபெறும் இடங்கள் அறிவிப்பு

Webdunia
திங்கள், 22 ஏப்ரல் 2019 (18:16 IST)
இந்த ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதுவரை 39 லீக் போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் இன்னும் 17 லீக் போட்டிகள் நடைபெறவுள்ளன
 
அதனையடுத்து முதல் நான்கு இடங்கள் பெற்ற அணிகள் குவாலிஃபயருக்கு தகுதி பெறும். முதலாம் இரண்டாம் இடம் பெற்ற அணிகள் மோதும் குவாலிஃபயர் போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுவிடும். 3ஆம், 4ஆம் இடம் பெற்ற அணிகளுக்கு இடையிலான குவாலிஃபயர் போட்டியில் வெற்றி பெறும் அணி முதல் குவாலிஃபயரில் தோல்வி அடைந்த அணியுடன் மோதும். இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதி போட்டிக்கு தகுதி பெறும்
 
இந்த நிலையில் முதலாம் குவாலிஃபயர் போட்டி சென்னையிலும், இரண்டாம் குவாலிஃபயர் போட்டி விசாகப்பட்டினத்திலும் நடைபெறும் என்றும், இறுதி போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இறுதிப்போட்டி சென்னையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த போட்டி ஐதராபாத்துக்கு மாற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விராட் கோலியை கைது செய்ய வேண்டும்..? அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வேலையா? - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

அனைத்து விதமானக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு.. பியுஷ் சாவ்லா அறிவிப்பு!

பும்ரா எந்தந்த டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார்?… கம்பீர் கொடுத்த பதில்!

கேப்டன்சியில் என் ஸ்டைல் வித்தியாசமாக இருக்கும்… ஆனால்?- புதுக் கேப்டன் ஷுப்மன் கில்!

ஐபிஎல் கோப்பை, தந்தையின் மரணம்… 18 ஆம் எண்ணுக்குப் பின்னுள்ள கதையைப் பகிர்ந்த கோலி!

அடுத்த கட்டுரையில்
Show comments