Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாங்கள் வெவ்வேறு நாடுகளுக்காக விளையாடினாலும் அனைவரும் கிரிக்கெட்டர்கள்… கோலிக்கு ஆதரவாக பாக் முன்னாள் கேப்டன்!

Webdunia
திங்கள், 1 நவம்பர் 2021 (16:27 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் குடும்பத்தினரை மிரட்டும் விதமாக சிலர் பேசிவருவது கண்டனத்துக்குரியது என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் மிக மோசமாக விளையாடி பாகிஸ்தான் மற்றும் நியுசிலாந்து ஆகிய அணிகளிடம் தோற்றுள்ளது. இந்நிலையில் சிலர் கேப்டன் கோலியை மோசமாக விமர்சனம் செய்து வருகின்றனர். இன்னும் சிலர் கோலியின் மகள் மற்றும் மனைவி அனுஷ்கா ஷர்மா ஆகியோரை மிரட்டும் விதமாக பதிவிட்டு வருகின்றனர்.

இது சம்மந்தமாக தன்னுடைய கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் ‘கிரிக்கெட் என்பது விளையாட்டு என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். நாங்கள் வெவ்வேறு நாடுகளுக்காக விளையாடினாலும் நாங்கள் அனைவரும் கிரிக்கெட் வீரர்கள். கோலியின் பேட்டிங் மற்றும் கேப்டன்சியை விமர்சிக்கலாம். ஆனால் அவரின் குடும்பத்தைத் தாக்கிப் பேசுவதும் மிரட்டுவதும் தவறாகும். ’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் இடம்பெற்ற தோனி.. அவருக்கு முன்பு இடம்பெற்ற இந்திய வீரர்கள் யார் யார் தெரியுமா?

நடுவரை எதிர்த்து விமர்சனம்.. பேட்டை தூக்கி வீசியதால் அஸ்வினுக்கு அபராதம்.. டி.என்.பி.எல்-இல் பரபரப்பு..!

ஒருநாள் கேப்டன் பொறுப்பில் இருந்தும் ரோஹித் ஷர்மா நீக்கப்பட உள்ளாரா? பிசிசிஐ ஆலோசனை!

சின்னசாமி மைதானத்தில் நடக்கவிருந்த சர்வதேச போட்டிகள் இடமாற்றம்!

RCB அணி முன்பே கோப்பையை வெல்லாததுதான் அசம்பாவிதத்துக்குக் காரணம்… சுனில் கவாஸ்கர் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments