தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக விளையாடும் இந்திய அணி அறிவிப்பு

Webdunia
வியாழன், 29 ஆகஸ்ட் 2019 (21:34 IST)
இந்தியா தற்போது மேற்கிந்திய தீவுகள் நாட்டில் சுற்றுப்பயணம் செய்து அந்நாட்டு அணியுடன் விளையாடி வரும் நிலையில் வரும் செப்டம்பர் 15ம் தேதி முதல் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டிகளில் விளையாட உள்ளது
 
 
இந்த போட்டியில் விளையாடும் இந்திய வீரர்கள் குறித்த அறிவிப்பு சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியில் விராட் கோலி, கேஎல் ராகுல், ஷிகர் தவான், மனிஷ் பாண்டே, ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, க்ருணால் பாண்ட்யா, வாஷிங்டன் சுந்தார், ராகுல் சஹா, கலில் அகமது, தீபக் சஹார் மற்றும் நவ்தீப் சயினி ஆகியோர் தேர்வு பெற்றுள்ளனர். இந்த தொடரில் எதிர்பார்த்தபடியே எம்.எஸ்.தோனி இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி செப்டம்பர் 15ஆம் தேதியும், 2வது டி20 போட்டி செப்டம்பர் 18ஆம் தேதியும், 3வது டி20 போட்டி செப்டம்பர் 22ஆம் தேதியும் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

படுதோல்வி எதிரொலி: காம்பீருக்கு பதில் விவிஎஸ் லக்ஷ்மன் தலைமை பயிற்சியாளரா?

இப்ப இருக்கும் டெஸ்ட் அணி சுமாரான் அணிதான்… பும்ராவும் இல்லன்னா என்ன பண்ணுவாங்க?- அஸ்வின் கவலை!

வொயிட் வாஷ் தோல்வி… உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அட்டவணையில் இந்தியா சரிவு!

முற்றிலும் சரணடைந்துவிட்டார்கள்.. இது நடந்திருக்க கூடாது: கும்ப்ளே கண்டனம்..!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல்: மோசமான தோல்வியால் பாகிஸ்தானுக்கு கீழே போன இந்தியா..!

அடுத்த கட்டுரையில்
Show comments