Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர்: மும்பை அணியை வீழ்த்தியது புனே அணி

ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர்: மும்பை அணியை வீழ்த்தியது புனே அணி
, செவ்வாய், 6 அக்டோபர் 2015 (07:07 IST)
ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரில் மும்பை அணியை வீழ்த்தி புனே அணி வெற்றியுடன் தொடரை தொடங்கியுள்ளது.


 

 
இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் இரண்டாவது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. மேற்று நடைபெற்ற இரண்டாவது லீக் போட்டியில் டெல்லி அணியை கோவா வீழ்த்தியது.
 
இந்நிலையில் இந்தத் தொடரின் மூன்றாவது லீக் போட்டி நேற்று நடைபெற்றது. இதில்  எஃப்.சி புனே சிட்டி அணியும், மும்பை சிட்டி எஃப்.சி அணியும் மோதின.
 
ஆட்டத்தின் 12 வது நிமிடத்தில் புனே அணி வீரர் சன்லி புனே அணியின் கோல் கணக்கை துவக்கி வைத்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக 34வது நிமிடத்தில் மும்பை அணி வீரர் பியியோக்கியோனி கோல் அடித்து ஆட்டத்தை சமன் படுத்தினார்.
 
இதனால் முதல் பாதி ஆட்டம் சமனில் முடிந்தது. இரண்டாவது பாதியின் 56 வது நிமிடத்தில் புனே அணி வீரர் சன்லி  மேலும் ஒருகோல் அடித்து அணிக்கு முன்னிலை தேடித்தந்தார். இறுதியில் புனே அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று தொடரை வெற்றியுடன் துவக்கியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil