Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கபடி மாஸ்டர்ஸ்: சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா

Webdunia
சனி, 30 ஜூன் 2018 (22:25 IST)
துபாயில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த கபடி மாஸ்டர்ஸ் போட்டியின் இறுதியாட்டத்தில் ஈரானை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.
 
துபாயில் நடைபெற்று வந்த இந்தியா, பாகிஸ்தான், ஈரான், தென்கொரியா, அர்ஜெண்டினா, கென்யா ஆகிய 6 நாட்டின் அணிகள் கலந்து கொண்ட கபடி மாஸ்டர்ஸ் தொடர் இன்றுடன் முடிவுக்கு வந்தது. 
 
இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா, ஈரான் அணியுடன் மோதியது. இந்த போட்டியில் ஆரம்பத்தில் இருந்தே இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் முதல் பாதி ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி 18-11 என்ற புள்ளிக்கணக்கில்  முன்னிலை வகித்தது.
 
இந்த நிலையில் இரண்டாவது பாதிநேர ஆட்டத்திலும் இந்திய அணி ஆதிக்கம் தொடர்ந்தது. ஆட்டத்தின் இறுதியில் இந்தியா 44 புள்ளிகளும் ஈரான் 26 என்ற புள்ளிகளும் எடுத்ததால் இந்திய அணி 44-26 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. 

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments