Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சொதப்பிய பேட்ஸ்மேன்கள்… 6 விக்கெட்களை இழந்து தடுமாறும் இந்தியா!

Webdunia
சனி, 12 மார்ச் 2022 (17:05 IST)
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று பெங்களூருவில் தொடங்கி நடந்துவருகிறது.

இந்தியா மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு நடைபெற்ற முதலாவது கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்ற நிலையில் 2வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி மார்ச் 12 ஆம் தேதி ( இன்று) பெங்களூரில் நடைபெற உள்ளது. இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது  2-வது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் தொடங்கியது. பகல் - இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியாக நடைபெற்று வரும் இந்த போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் எந்தவொரு பேட்ஸ்மேனும் நிலைத்து நின்று ஆடாமல் வருவதும் அவுட் ஆகி பெவிலியன் செல்வதுமாக இருந்தனர். இப்போது வரை இந்திய அணி 6 விக்கெட்களை இழந்து 151 ரன்கள் சேர்த்து தடுமாறி வருகிறது. தற்போது களத்தில் ஸ்ரேயாஸ் ஐயரும், ரவிச்சந்திரன் அஸ்வினும் விளையாடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித் மட்டும் RCB அணிக்கு சென்றால்…? –ஏபி டிவில்லியர்ஸின் ஆசை!

தொடக்க ஆட்டக்காரர்களாக புதிய ஜோடி… சூர்யகுமார் யாதவ் அறிவிப்பு!

வங்கதேச டி 20 தொடரில் இருந்து ஷிவம் துபே விலகல்… மாற்று வீரர் அறிவிப்பு!

மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர்: இந்திய அணி தோல்வி..!

இரண்டு இந்திய வீரர்களைக் குறிவைக்கும் கங்குலி… டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு யார் பயிற்சியாளர்?

அடுத்த கட்டுரையில்
Show comments