Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோப்பையை வென்றது இந்தியா! சொந்த மண்ணில் மே.இ.தீவுகள் பரிதாபம்

Webdunia
வெள்ளி, 7 ஜூலை 2017 (04:10 IST)
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளின் கிரிக்கெட் போட்டி தொடர் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் நேற்று 5வது மற்றும் இறுதி போட்டி நடந்தது. ஏற்கனவே நடைபெற்ற 4 போட்டிகளில் இந்தியா 2 போட்டிகளிலும் மேற்கிந்திய தீவுகள் அணி ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றிருந்தது. ஒரு போட்டி மழையால் ரத்து ஆனது. நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்தியா தொடரை வெல்லும் நிலை இருந்தது.



 
 
இந்த நிலையில் நேற்று முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 205 ரன்கள் எடுத்தது. 206 ரன்கள் எடுத்தால் வெற்றி மற்றும் தொடரை வெல்லலாம் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி மிக அபாரமாக விளையாடி 36.5 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 206 ரன்கள் எடுத்தது
 
கேப்டன் விராத் கோஹ்லி மிக அபாரமாக விளையாடி 111 ரன்கள் குவித்தார். தினேஷ் கார்த்திக் 50 ரன்கள் அடித்தார். இந்த வெற்றியின் மூலம் இந்தியா 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. விராத் கோஹ்லி ஆட்டநாயகனாகவும், ரஹானே தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர். 
 
இரு அணிகளுக்கு இடையிலான டி-20 போட்டி வரும் ஜூலை 9ஆம் தேதி நடைபெறவுள்ளது.
 

மழையால் தாமதமாகும் ராஜஸ்தான் - கொல்கத்தா போட்டி.. போட்டி ரத்தானால் 2ஆம் இடம் யாருக்கு?

ஐதராபாத் அபார வெற்றி.. 214 ரன்கள் அடித்தும் பஞ்சாப் பரிதாபம்.. புள்ளிப்பட்டியலில் 2ஆம் இடம்..

எங்க போனாலும் கேமராவை தூக்கிக்கிட்டு உள்ள வந்துடுவீங்களா? – ஸ்டார் ஸ்போர்ட்ஸை பொறிந்து தள்ளிய ஹிட்மேன்!

சாதனை படைத்த RCB vs CSK போட்டி..! இத்தனை கோடி பேர் பார்த்தார்களா..?

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து ஜெயக்குமார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments