Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கைக்கு மீண்டும் ஒரு தோல்வி: பழிவாங்கியது இந்தியா

Webdunia
திங்கள், 12 மார்ச் 2018 (23:51 IST)
இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகிய மூன்று நாடுகளுக்கு இடையிலான டி20 முத்தரப்பு தொடர் போட்டியில் இன்று இந்தியா-இலங்கை அணிகள் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச முடிவு செய்தது. மேலும் மழை குறுக்கிட்டதால் 19 ஓவர் போட்டியாகவும் மாற்றப்பட்டது,

முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 19 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 152 ரன்கள் எடுத்தது. மெண்டிஸ் 55 ரன்கள் எடுத்தார்.

153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய இந்திய அணி 17.3 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 153 ரன்கள் எடுத்து முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு பழிவாங்கி வெற்றி பெற்றது. 4  விக்கெட்டுக்களை வீழ்த்திய தாகுர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யபப்ட்டுள்ளார். இரண்டு வெற்றிகள் பெற்ற இந்தியா தற்போது 4 புள்ளிகளுடன் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது. இலங்கை மற்றும் வங்கதேசம் தலா ஒரு வெற்றி பெற்று இரண்டு புள்ளிகளுடன் உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments