Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா அபார வெற்றி! சொந்த மண்ணில் படுதோல்வி அடைந்த மேற்கிந்திய தீவு

Webdunia
திங்கள், 26 ஜூன் 2017 (04:02 IST)
மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய அணி, முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்ட நிலையில் நேற்று நடைபெற்ற 2வது போட்டியில் 105 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.



 


டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ததால் முதலில் களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 43 ஓவர்களில் 310 ரன்கள் குவித்தது. ரஹானே 103 ரன்களும், தவான் 63 ரன்களும், கேப்டன் விராத் கோஹ்லி 87 ரன்களும் குவித்தனர்.

311 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய மேற்கிந்திய தீவுகள் அணி முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்து தடுமாறியது இறுதியில் 43 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 205 ரன்கள் மட்டுமே எடுத்தது. ரஹானே ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

முன்னதாக மழை காரணமாக இந்த போட்டி 43 ஓவர் போட்டியாக குறைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோலி, ரோஹித்திடம் இருந்த தகுதிகள் கில்லிடம் உள்ளன… அவர் அணியை வழிநடத்தத் தயார்- இந்திய வீரர் பாராட்டு!

டி20 போட்டியில் 257 ரன்கள் எடுத்த மே.இ.தீவுகள்.. கிட்டத்தட்ட இலக்கை நெருங்கிய அயர்லாந்து..!

இனி மூவர் கூட்டணியை வெற்றிக் கூட்டணி என சொல்ல முடியாது- ஜான்சன் கருத்து!

பியர் இருக்கிறது வா என்றார்… சென்றுவிட்டேன்… வெற்றிக் கொண்டாட்டம் குறித்து எய்டன் மார்க்ரம்!

இங்கிலாந்து தொடருக்கு என் பெயர் வேண்டாம்… பிசிசிஐக்கு சச்சின் வேண்டுகோள்!

அடுத்த கட்டுரையில்
Show comments