Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசியக் கோப்பையில் இந்தியா விளையாடாது – பிசிசிஐ நெருக்கடி !

Webdunia
வியாழன், 30 ஜனவரி 2020 (16:28 IST)
பாகிஸ்தானில் நடக்க இருக்கும் அடுத்த ஆண்டு ஆசியக் கோப்பையில் இந்திய விளையாடாது என பிசிசிஐ அறிவித்துள்ளது.

ஆசிய அணிகளுக்குள் நடத்தப்படும் ஆசியக் கோப்பை போட்டி இரண்டு வருடத்துக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. இதில் அதிகமுறைக் கோப்பையினை வென்ற அணியாக இந்தியா இருந்து வருகிறது.

இந்நிலையில் அடுத்த ஆண்டு இந்த ஆசியக் கோப்பை தொடரை பாகிஸ்தானில் நடத்த ஆசிய கிரிகெட் வாரியம் (ACC) முடிவுசெய்துள்ளது. அரசியல் காரணங்களால் இரு அணிகளும் தனிப்பட்ட தொடர்களில் இதுவரை விளையாடாமல் உள்ளன. ஆனால் உலகக்கோப்பை போன்ற தொடர்களில் மோதி வருகின்றன.

இந்நிலையில் பாகிஸ்தானில் நடக்கும் தொடரில் இந்தியா விளையாடாது என பிசிசிஐ தெரிவித்துள்ளது. இதனால் இந்தியா இல்லாமல் ஆசியக் கோப்பை நடைபெறுமா அல்லது இரு நாடுகளுக்கும் பொதுவான ஒரு நாட்டில் போட்டிகள் நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

18 ரன்கள்.. 18 ஓவர்.. 18ம் தேதி.. 18ம் ஜெர்சி! 18க்குள்ள இவ்ளோ விஷயம் இருக்கா? – வரலாறு காணாத CSK vs RCB போட்டிக்கு தயாரா?

வலைப்பயிற்சியில் ஆச்சர்யப்படுத்திய தோனி… ஆர் சி பி அணிக்கு எதிரான போட்டிக்கு 100 சதவீதம் தயார்!

தோனி இன்னும் இரண்டு ஆண்டுகள் விளையாடுவார்… முன்னாள் சி எஸ் கே வீரர் நம்பிக்கை!

எளிதாக ப்ளே ஆஃப் சென்ற SRH… ஆர் சி பி& சி எஸ் கே அணிகளுக்கு வாழ்வா சாவா போட்டி!

கைவிடப்பட்ட போட்டி… எளிதாக ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற ஐதராபாத்!

அடுத்த கட்டுரையில்
Show comments