Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகளிர் ஆசிய கோப்பை: ஒரு பந்து மீதம் இருக்கையில் இலங்கை த்ரில் வெற்றி.. சோகத்தில் பாகிஸ்தான்..!

Mahendran
சனி, 27 ஜூலை 2024 (09:07 IST)
மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் மகளிர் அணி 20 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 141 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை அணி 19.5 ஓவர்களில் ஒரே ஒரு பந்து மீ தம் இருக்கையில் 141 ரன்கள் எடுத்து திரில் வெற்றி பெற்றது

 இந்த போட்டியில் வெற்றியை நெருங்கிக் கொண்டிருந்த இலங்கை விக்கெட்டுகள் விழுந்து கொண்டிருந்த நிலையில் கடைசி ஓவரில் மூன்று ரன்கள் மட்டுமே எடுக்க வேண்டும் என்ற நிலை இருந்தது.

முதல் பந்தில் ரன் எடுக்காமல் இருந்த நிலையில், இரண்டாவது பந்தில் விக்கெட் விழுந்தது, மூன்றாவது பந்திலும் ரன் இல்லை . இதனை அடுத்து நான்காவது பந்தில் ஒரு ரன் மற்றும் ஐந்தாவது பந்தில் ஒரு வைடு எடுத்த நிலையில் மீண்டும் ஐந்தாவது பந்தில் ஒரு ரன் எடுத்து இலங்கை அணி வெற்றி பெற்றது.

 இந்த வெற்றியை அடுத்து நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியா - இலங்கை அணிகள் மோத உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

17 வருடங்களுக்கு முன் தோனி கேப்டனாக முதல் போட்டியில் விளையாடிய நாள் இன்று!

ரோஹித் ஷர்மா கேப்டன் இல்லை… தலைவர்- நள்ளிரவில் அவர் செய்த செயலை சிலாகித்த பியூஷ் சாவ்லா!

நமக்கு இதெல்லாம் தேவையா ?… சன் கிளாஸோடு பேட் செய்து டக் அவுட் ஆன ஸ்ரேயாஸ்- ட்ரோல் செய்யும் நெட்டிசன்ஸ்!

இந்திய அணியோடு இணைந்த புதிய பந்துவீச்சு பயிற்சியாளர்!

இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டை மாற்றியமைத்தவர் கோலிதான்… முன்னாள் ஜாம்பவான் புகழாரம்!

அடுத்த கட்டுரையில்
Show comments