Webdunia - Bharat's app for daily news and videos

Install App

292 ரன்கள் முன்னிலை: இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு

Webdunia
திங்கள், 20 ஆகஸ்ட் 2018 (06:59 IST)
இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தோல்வி அடைந்ததால் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானது. இந்த நிலையில் கடந்த 18ஆம் தேதி ஆரம்பித்த 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 329 ரன்கள் எடுத்தது. 
 
இந்த நிலையில் முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி இந்திய பவுலர்களின் அதிரடி பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 161 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனையடுத்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 31 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 124 ரன்கள் எடுத்துள்ளது. புஜாரே 33 ரன்களுடனும், கேப்டன் விராத் கோஹ்லி 8 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.
 
இந்திய அணி தற்போது 292 ரன்கள் முன்னிலையில் உள்ளது. இன்னும் 8 விக்கெட்டுக்கள் கைவசம் இருக்கும் நிலையில் ஆட்டம் இன்னும் மூன்று நாட்கள் மீதமிருப்பதால் இந்திய அணி வெற்றி பெற பிரகாசமான வாய்ப்பு உள்ளது

தொடர்புடைய செய்திகள்

“தொடர்ந்து நான்காவது தோல்வி… வீரர்கள் அதை ஒப்புக்கொள்ள வேண்டும்” – சஞ்சு கேப்டன் ஆதங்கம்!

சி எஸ் கே அணியை விட்டு விலகுகிறாரா ஸ்டீபன் பிளமிங்? காசி விஸ்வநாதன் பதில்!

கேப்டன் சாம் கர்ரன் அபார பேட்டிங்.. பஞ்சாப் அணிக்கு ஆறுதல் வெற்றி..!

வலுவான ராஜஸ்தானை எதிர்கொள்ளும் முன்னணி வீரர்கள் இல்லாத பஞ்சாப்… டாஸ் அப்டேட்!

சிறுமி வன்கொடுமை வழக்கு.. நிரபராதியான சந்தீப் லமிச்சேனே! – உலகக்கோப்பையில் நடக்கும் அதிரடி மாற்றம்!

அடுத்த கட்டுரையில்
Show comments