ஃபாலோ ஆனை தவிர்த்தது இந்திய அணி.. 10 விக்கெட்டில் அசத்தும் பும்ரா-ஆகாஷ் தீப்

Siva
செவ்வாய், 17 டிசம்பர் 2024 (13:21 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி ஃபாலோ ஆனை தவிர்த்து உள்ளது. பத்தாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த பும்ரா மற்றும் ஆகாஷ் தீப் அருமையாக விளையாடி வருகின்றனர். இதில் ஆகாஷ் பவுண்டரி மற்றும் சிக்சர் அடித்ததும் ஹைலைட் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 445 ரன்கள் எடுத்த நிலையில், சில நிமிடங்களுக்கு முன்பு இந்திய அணி ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 215 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

இதனால் இந்திய அணி ஃபாலோ ஆன் ஆகிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பும்ரா, ஆகாஷ் தீப் ஆகிய இருவரும் அருமையாக விளையாடி வருகின்றனர். குறிப்பாக 75வது ஓவரில், பேட் கமின்ஸ் பந்தை அடித்து, விளாசிய ஆகாஷ் தீப் ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்சரை வெளுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எம்.எஸ். தோனியின் சாதனைக்கு குறி வைத்த விராட் கோலி! நாளை அந்த சாதனை நிகழுமா?

கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக… 50 ஓவர்களையும் ஸ்பின்னர்களை வீச வைத்த பங்களாதேஷ்!

பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகக் கருத்து கூறியதால் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டாரா முகமது ரிஸ்வான்?

ஷுப்மன் கில்லின் தேர்வை எதிர்த்தாரா சூர்யகுமார் யாதவ்… ஆசியக் கோப்பை தொடரில் எழுந்த புகைச்சல்!

மகளிர் உலகக் கோப்பை: அரையிறுதிக்கு தகுதி பெறுமா இந்தியா? 2 அணிகளால் சிக்கல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments