Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி: பும்ரா பந்தை அடித்து நொறுக்கும் ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள்

Siva
வியாழன், 26 டிசம்பர் 2024 (07:36 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான நான்காவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கிய நிலையில், ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே டெஸ்ட் கிரிக்கெட் தொடரில், முதல் டெஸ்டில் இந்தியாவும் இரண்டாவது டெஸ்டில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்ற நிலையில், மூன்றாவது டெஸ்ட் இரு அணிகளுக்கும் வெற்றி தோல்வி இன்றி டிராவில் முடிந்தது.

இந்த நிலையில், இன்று நான்காவது டெஸ்ட் தொடங்கிய நிலையில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. தொடக்க ஆட்டக்காரரான சாம், ஜடேஜா பந்தில் அவுட் ஆன நிலையில், தற்போது உஸ்மான் மற்றும் லாபுசாஞ்சே பேட்டிங் செய்து வருகின்றனர். ஆஸ்திரேலிய அணி சற்றுமுன் 25 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு112 ரன்கள் எடுத்துள்ளது.

இன்றைய போட்டியில், பும்ரா வீசிய ஏழாவது ஓவரில் 14 ரன்களும், 11வது ஓவரில் 18 ரன்களும் அடிக்கப்பட்டன. பும்ரா பந்து வீச்சை குறிவைத்து ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் அடித்து நொறுக்கி வருவதாக கூறப்படுகிறது.

இந்த நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால், தொடரை வெல்லும் வாய்ப்பு அதிகமாக இருப்பதால், இந்திய வீரர்கள் அணிக்கு வெற்றியை தேடி கொடுப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைவரும் உடல் தகுதியோடு உள்ளனர்… கம்பீர் கொடுத்த அப்டேட்… இறுதிப் போட்டியில் விளையாடுவாரா பும்ரா?

இங்கிலாந்து தொடரோடு டெஸ்ட் போட்டிகளில் ஓய்வா?... பும்ரா பற்றி பரவும் தகவல்!

மகளிர் உலக கோப்பை செஸ் சாம்பியன் ஆனார் திவ்யா தேஷ்முக்.. குவியும் வாழ்த்துக்கள்..!

முக்கியமான போட்டிகளில் 10 வீரர்களோடு விளையாடுவது பின்னடைவு!… ஐசிசிக்குக் கம்பீர் வேண்டுகோள்!

நம் முடியெல்லாம் நரைப்பதற்கு மரியாதையே இல்லை… கெவின் பீட்டர்சனைக் காட்டமாக விமர்சித்த அஸ்வின்!

அடுத்த கட்டுரையில்
Show comments