Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒலிம்பிக் போட்டி தூதராக அபினவ் பிந்த்ரா அறிவிப்பு

ஒலிம்பிக் போட்டி தூதராக அபினவ் பிந்த்ரா அறிவிப்பு
, வெள்ளி, 29 ஏப்ரல் 2016 (20:35 IST)
ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய தூதராக செயல்பட கோரிய இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் அழைப்பை ஏற்றுக் கொண்டார் அபினவ் பிந்த்ரா.


 
 
ரியோ ஒலிம்பிக் 2016 போட்டிக்காக இந்திய தூதராக செயல்பட சச்சின், ஏ.ஆர்.ரகுமான், போன்றவர்களுக்கு கடிதம் அனுப்பியது இந்திய ஒலிம்பிக் சங்கம்.
 
மேலும், பல பேரிடம் இது குறித்து பேச இருப்பதாக இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் துணைத் தலைவர் டர்லோச்சன் சிங் கூறினார்.
 
இந்நிலையில், பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற துப்பாக்கி சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ரா-வுக்கும் கடிதம் அனுப்பியது. கடிதத்தை ஏற்றுக் கொண்ட அபினவ் பிந்த்ரா ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய தூதராக மாறினார்.
 
இதையடுத்து, எதிர்பார்த்த முன்னால் கிரிக்கெட் வீரர் சச்சின் எந்த பதிலும் அளிக்காத நிலையில் அழைப்பை அபினவ் பிந்த்ரா ஏற்றுக் கொண்டார், என்று இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் துணைத் தலைவர் டர்லோச்சன் சிங் கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய தூதராகிறார் ஏஆர் ரகுமான்?