Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இங்கிலாந்து படுதோல்வி.. இந்திய பவுலர்கள் அசத்தல்.. இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற இந்தியா..!

Siva
வெள்ளி, 28 ஜூன் 2024 (07:21 IST)
நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான அரையிறுதி போட்டியில் இந்திய பவுலர்களின் அசத்தலான விளையாட்டு காரணமாக இந்தியா அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது. கேப்டன் ரோஹித் சர்மா 57 ரன்களும் சூரியகுமார் யாதவ் 47 ரன்களும் எடுத்தனர்.

 இதனை அடுத்து 172 என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து விளையாடிய நிலையில் இந்திய பவுலர்கள் அக்சர் பட்டேல் மற்றும் குல்தீப் யாதவ் அபார பந்துவீசி இங்கிலாந்து அணியை 103 ரன்களுக்கு சுருட்டினர். இருவரும் தலா 3 விக்கெட்டுக்களை வீழ்த்த, பும்ரா  2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்த வெற்றியின் காரணமாக இந்தியா இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில் நாளை தென்னாபிரிக்க அணியுடன் இறுதி போட்டியில் இந்திய அணி மோத உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒரே ஒரு போட்டியில் வெற்றி பெற்று விட்டால் இந்திய அணி டி 20 சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற நிலையில் ரசிகர்கள் அந்த போட்டியை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

RCB வீரர் யாஷ் தயாள் மீது பாலியல் புகார்… போலீஸார் வழக்குப் பதிவு!

இந்தியா இங்கிலாந்து தொடரைக் கிண்டலடித்த ஆஸி கேப்டன் பேட் கம்மின்ஸ்!

ஏன் லாரா சாதனையை முறியடிக்காமல் டிக்ளேர் செய்தீர்கள்?.. வியான் முல்டர் அளித்த பதில்!

லாராவின் 400 ரன்கள் சாதனையை நெருங்கிய தெ.ஆ. வீரர்.. திடீரென டிக்ளேர் செய்த கேப்டன்..!

டெல்லி பிரிமியர் லீக் ஏலம்.. சேவாக் மகன், விராத் கோஹ்லி உறவினருக்கு எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments