Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா பீதி: இந்திய ஒலிம்பிக் குழு பயணம் ரத்து!

Webdunia
திங்கள், 16 மார்ச் 2020 (08:44 IST)
உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தலால் ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய குழுவின் பயணம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கோவிட்19 என்றழைக்கப்படும் கொரோனா வைரஸ் ஏராளமான மக்களை பலிக் கொண்டுள்ளது. பல நாடுகளில் பொதுமக்கள் வெளியில் நடமாடுவதற்கே தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வருகின்ற ஜூலை மாதம் ஜப்பானில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

உலகம் முழுவதும் கொரோனா தாக்கம் இருக்கும் நிலையில் ஒலிம்பிக் நடக்குமா என்ற சந்தேகம் எழுந்திருந்த நிலையில், ஜப்பானின் ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்புகளை சோதனை செய்ய செல்ல வேண்டிய இந்திய ஒலிம்பிக் பாதுகாப்பு சோதனை குழு தங்களது டோக்கியோ பயணத்தை ஒத்தி வைத்துள்ளது.

கடந்த வாரம் கிரீஸில் பொதுமக்கள் யாரும் பங்கேற்காமலே ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கில் இன்னிங்ஸுக்கு நடுவே சோம்பேறியாகிவிடுகிறார்… ரிக்கி பாண்டிங் விமர்சனம்!

விராட் கோலி மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்குத் திரும்புவார்- மைக்கேல் கிளார்க் நம்பிக்கை!

ODI –ல் சதமடித்தாலும் பாராட்டமாட்டார்.. ஆனால் டெஸ்ட்டில் 50 ரன்கள் அடித்தாலே…- அப்பா குறித்து ரோஹித் நெகிழ்ச்சி!

விராட் கோலியை கைது செய்ய வேண்டும்..? அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வேலையா? - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

அனைத்து விதமானக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு.. பியுஷ் சாவ்லா அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments