2வது இன்னிங்ஸில் 466 ரன்கள்: இந்தியா வெற்றி பெற வாய்ப்பா?

Webdunia
திங்கள், 6 செப்டம்பர் 2021 (08:11 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் நான்காவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 466 ரன்கள் குவித்துள்ளது. இதனால் இந்த டெஸ்ட்டில் இந்திய அணி வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது 
 
முதல் இன்னிங்சில் இந்தியா 191ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில் இங்கிலாந்து அணி 290 ரன்கள் எடுத்து 99 ரன்கள் முன்னிலையில் இருந்தது. இந்த நிலையில் இந்தியா தனது 2-வது இன்னிங்சை அதிரடியாக விளையாடி 466 ரன்கள் குவித்துள்ளது. ரோகித் சர்மா 127 ரன்கள், புஜாரா 61 ரன்கள், ஷர்துல் தாக்கூர் 60 ரன்கள், ரிஷப் பண்ட் 50 ரன்கள் எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இங்கிலாந்து தற்போது தனது 2வது இன்னிங்சில் விக்கெட் இழப்பிற்கு 70 ரன்கள் எடுத்துள்ளது என்பதும் அந்த அணி 293 ரன்கள் பின்தங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய இறுதி நாளில் இந்திய அணிக்கு வெற்றி கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெஸ்ட் கிரிக்கெட்: இரட்டை சதத்தை நெருங்கினார் ஜெய்ஸ்வால் !

ஐபிஎல் கப் அடிச்சே ஆகணும்! மனதை கல்லாக்கி சிஎஸ்கே எடுத்த முடிவு! முக்கிய வீரர்கள் விடுவிப்பு?

மே.இ.தீவுகளுக்கு எதிரான 2வது டெஸ்ட்.. ஜெய்ஸ்வால் அபார சதம்.. சாய் சுதர்சன் அரைசதம்.. ஸ்கோர் விவரங்கள்..!

ரோஹித்துக்கு நடப்பது, எனக்கும் நடந்தது… ஷுப்மன் கில்லை முன்னிறுத்துவது குறித்து கங்குலி கருத்து!

ரசிகர்களோடு பேச மொழி தடையாக இருந்தது இல்லை… தோனி பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments